...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Monday, September 28, 2015

அஞ்சல் நான்கின் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகிறோம் 

324 தபால்காரர்களுக்கு பழைய பென்சன் திட்டத்தில் சேர்ப்பதற்கு உத்திரவு போடுவதாக உறுதியளித்த நமது CPMG அவர்களுக்கு நன்றி!!!


புதிய பென்சன் திட்டத்தில் உள்ள  324 தபால்காரர்களுக்கு பழைய பென்சன் திட்டத்தில் சேர்ப்பதற்கு உத்திரவு போடுவதாக உறுதியளித்த நமது 

CPMG அவர்களுக்கு நன்றி!!!

தோழர்களே!
                           GDS ஆக பணிபுரிந்து  27.10.2002 ல் தபால்காரர் தேர்வு எழுதி வெற்றி  பெற்ற ஊழியர்களுக்கு 29.12.2003 முதல் 07.01.2004 வரை TRAINING கொடுக்கப்பட்டது.  1.1.2004 க்கு பின் நியமனம் பெற்றவர்களுக்கு  புதிய பென்சன் திட்டம் என்று சொல்லி அந்த தோழர்களுக்கு பழைய பென்சன் திட்டம் மறுக்கப்பட்டது. நமது மாநில சங்கம் இந்த பிரச்சனையை மத்திய சங்கத்திற்கும், JCM மட்டத்திலும் கொண்டுசென்று ஊழியர்களுக்கு சாதகமான அரசு உத்திரவும்  பெற்றோம். இதில் ஒரு சிலருக்கு மட்டுமே பழைய பென்சன் திட்டம் அமுலாகி உள்ளது. 

                         இன்று (25.09.2015) CPMG அவர்களிடம்  இந்த பிரச்சனை சம்பந்தமாக நமது மாநில சங்கத்தின் சார்பாக மாநில செயலாளர் தோழர் G.கண்ணன் மற்றும் முன்னாள் மாநிலத்தலைவர் P3 தோழர் J.ஸ்ரீவி அவர்களும் கடிதம் கொடுத்து CPMG  அவர்களிடம் பேசினோம். CPMG அவர்கள் 324 பேருக்கும் பழைய பென்சன் திட்டத்தில் சேர்ப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியுள்ளார்கள். 

                       நமது மாநிலசங்கத்தின் கோரிக்கையை ஏற்று 324குடும்பங்களுக்கு உதவி செய்வதாக உறுதியளித்த நமது CPMG அவர்களுக்கு மாநில சங்கத்தின் சார்பாக மனமார்ந்த நன்றியைதெரிவித்துக்கொள்கிறோம்
.------------------------------------------------------------------------------------------------------

0 comments:

Post a Comment