...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, March 23, 2016

                                                  வருந்துகிறோம் 
தோழர் வைகுண்ட பெருமாள்(62) GDS Packer  பெருமாள்புரம் அவர்கள் 22.03.2016 அன்று இரவு மரணமடைந்தார்கள் என்பதனை வருத்தத்தோடு தெரிவித்து கொள்கிறோம் .அன்னாரது இறுதி சடங்கு இன்று 23.03.2016 (பாளையம்கோட்டை சம்பகடைதெரு)  பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் .
    அன்னாரது ஆன்மா அமைதியுற இறைவனை வேண்டுகிறோம் '
                                      SKJ நெல்லை 
-----------------------------------------------------------------------
                                      இதர செய்திகள் 
 இந்த மாத மாதாந்திர பேட்டி 29.03.2016 அன்று நடைபெறுகிறது .SUBJECTS இருந்தால்  26.03.2016 நமது செயற்குழுவில் அல்லது அதற்கு முன்னரே தெரிவிக்கவும் .
-----------------------------------------------------------------------------------------------------------------
 ஏப்ரல் 14 வியாழன் DR .அம்பேத்கார் அவர்களின் பிறந்தநாள் விடுமுறைதினமாக அறிவிக்கப்பட்டுள்ளது 
----------------------------------------------------------------------------
         தோழர்களின் முக்கிய கவனத்திற்கு 
  நெட் கிடைக்கவில்லை என்பதற்காக நெடுநேரம் இரவில் தங்க வேண்டிய அவசியம் இல்லை என CPMG அலுவலகத்தில் இருந்து அனைத்து கோட்ட அலுவலகத்திற்கும் தாக்கீது அனுப்பட்டுள்ளதாக மாநில செயலர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் .அவரது அறிக்கை இதோ    

நேற்றைய தேதியில்  நம்முடைய  மாநிலச் சங்கத்தின் மூலம் பேசிய பின்னர்  CPMG  அவர்கள்  FINACLE  SLOWNESS  காரணமாக எந்த ஒரு ஊழியரையும்  இரவு  காத்திருப்பு  செய்யக்கூடாது என்று  கீழ் மட்ட அதிகாரிகளுக்கு  ஈமெயில்  மூலம்  அறிவிக்கை  செய்துள்ளார். எனவே VOUCHER  POST  செய்ய  இயலவில்லை எனின்  உரிய அறிவிப்பு செய்துவிட்டு  அவரவர்கள்  இல்லம்  திரும்பலாம். மறுநாள்  காலை அந்த வேலையை தொடரலாம்.  கோட்ட அதிகாரிகள் செல்லக் கூடாது  என்று கூறுவார்களேயானால்   தங்கள்  பகுதி செயலர் மூலம்  மாநிலச் சங்கத்திற்கு  உடனே  தெரிவிக்கவும்.  உரிய  நடவடிக்கை உடன்  மேற்கொள்ளப்படும்.

 ஆகவே  இன்று முதல் மாலை 5 மணிக்கு மேல் NET கிடைக்கவில்லை என்றால்  9442123416 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் . 

                             தானாய் எல்லாம் முடியும் என்றால் 
                             முடியாது ..
                              கண்ணை மூடி திறந்ததும் -- விடியும் 
                              என்றால் விடியாது 
                                       தோழமையுடன்  SKJ 






0 comments:

Post a Comment