...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, December 1, 2021

 இம்சை அரசிக்கு ஒரு தொழிலாளியின் ரத்தம் கசிந்த பதில்கள் 

சீ ..சீ .....

 சூரியன் நீ என்றால்

 நாங்கள் பிரபஞ்சம் தான் 

 ராட்சசி நீ என்றால் 

நாங்களும் (NFPE )ரட்சகன் தான் 


நீ சக்தியல்ல --சூர்பனகை தான் 

ஆதாரம் எங்களிடம் ஆயிரம் இருக்கு !


தொழிலாளியின் கண்ணீர் வடிப்புக்கு 

நீ காரணம் என்றால் 

கண்ணீரை துடைக்கும் 

கைக்குட்டை NFPE தான் 

இன்று நீ வடிக்கும் நீலி கண்ணீர் உன் 

சகாக்களும் ஏற்றுக்கொள்ளவில்லை 


கருணை அடிப்படையில்

வேலை கேட்டு வந்தவரிடம்  நீ 

காட்டிய கொடுமை 

ஊர் அறியும் -உன் 

பேர் தெரியும் 


OUTSIDER முதுகில் சவாரி 

செய்துவிட்டு -நீ 

விண்ணப்பித்த மைலேஜ் தொகை 

குஷ்டரோகி கையில் 

வடிந்த தேனுக்கு சமமல்லவா ?


வறுமையின் விளிம்பில் நின்ற 

OUTSIDER யிடம் நீ பேசிய பேரம் 

5 லட்சம் பாலிசியாம் --100கணக்கு

உனது பாலிசியாம் !


ஒருமையில் பேசுவதும் 

பெருமையில் வாழ்வதும் 

உன் பிழைப்பு என்றால் 

பிழைத்து போ  !

உழைத்து வாழும் எங்களிடம் ஏன் 

உரசி  பார்க்கிறாய் ?எங்களிடம் ஏன் 

அரசியல் செய்கிறாய் ?


ஆய்வு நடத்தும் இடம் உன்

அரண்மனை என்றால் என்ன ?

அலுவலகம் என்றால் எமக்கென்ன ?

TA பில் போடாமலா இருந்தாயா  !


உன் அலுவலகத்தில் சதிகார 

கூட்டம் என்றால் ?

அதனை வேட்டையாட 

எங்களுக்கென்றும் அவகாசம் 

தேவையில்லை !


உன் உப கோட்டத்தில் 

எத்தனை தொழிலாளி செத்து போனான் 

என்றாவது இறுதி சடங்கில் போனதுண்டா ?

எத்தனை குடும்பங்கள் கள் கணவனை 

இழந்து வாடியபோதும் 

கைம் பெண்களை அலையவிட்டு 

அலைக்கழித்ததை மறக்கமுடியுமா ?


எங்களின் கண்ணீர் இன்னும் இருக்கு 

அம்மாவை ஆதரிப்போர் இனியாவது 

கேட்டு பார் !

உன் சகாக்களின் சாவின் போது 

சக்தி எங்கே போனது ? 

சூரியன் எங்கே ஒழிந்து கொண்டது ?

தொடரும் ..........ஜேக்கப் ராஜ் ------











0 comments:

Post a Comment