...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, March 22, 2022

     அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !   வணக்கம் 

                       GDS ஊழியர்களுக்கு பதிலிகள் போடுவது சம்பந்தமாக 11.02.2022 அன்று இலாகா வெளியிட்ட ஆணைக்கு நாடெங்கிலும் கிளம்பிய எதிர்ப்பினை அடுத்து 21.03.2022 அன்று அதற்கான விளக்க ஆணையை இலாகா பிறப்பித்துள்ளது .எந்த ஊழியர்களுக்கும் பதிலிகள் இல்லை என்று விடுப்பை மறுக்கக்கூடாது என்றும்  பதிலிகளை நியமிக்கும் போது அதற்கான justification இருக்கிறதா என பார்க்கவேண்டும் என்று விளக்கம் கொடுத்துள்ளது .இந்த விளக்க ஆணை இலாகா அல்லது அரசு தானாக வந்து கொடுக்கவில்லை .தலமட்டம் முதல் அகில இந்தியா வரை நாம் எழுப்பிய உரிமையின் குரல் என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது .ஒன்றுபட்ட போராட்டம் வென்று காட்டும் நிச்சயம் என்பது எவ்வளவு உண்மை பார்த்தீர்களா ?

நமது அஞ்சல் மூன்றின் தமிழ் மாநில மாநாட்டிற்கு நமது தோழர்கள் தொடர்ந்து நன்கொடை அளித்து வருகிறார்கள் அவர்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள் நேற்றைய நன்கொடையாளர்கள் V.சரவணன் S.துர்காதேவி P .கிருஷ்ணவேணி V.விஜயலக்ஷ்மி ரகுமாதவன் P.சுந்தரவள்ளி P.ராமகிருஷ்ணன் B.குமாரி N .கண்ணன் கிருஷ்ண குமாரி K.துளசி D.ஹேனா S.ராஜலக்ஷ்மி JAB .மேரி .இதில் யார் பெயரும் விடுபட்டிருந்தால் தெரிவிக்கவும் 

நடைபெறவிருக்கின்ற இரண்டு நாட்கள் வேலைநிறுத்தம் தொடர்பாக நாம் இரண்டுநாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறோம் .தோழர்கள் ஆனந்தராஜ் செல்வம் அருண்குமார் ஆகியோர் நம்முடன் சேர்ந்து வருகிறார்கள் 24.0.2022 அன்று புறநகர் பகுதி 25.02.2022அன்று மாநகர் பகுதி 25.02.2022 அன்று மாலை பாளை மற்றும் அம்பை தலைமை அஞ்சலகத்தில் கூட்டு போராட்ட குழுவின் சார்பாக போராட்ட விளக்கக்கூட்டம் நடைபெறும் 

நன்றி தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் --E.அருண்குமார் கோட்ட செயலர்கள் நெல்லை 

0 comments:

Post a Comment