...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, March 31, 2022

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .

01.04.2022  முதல் அஞ்சல் சேமிப்பு திட்டங்களான MIS /SCSS/TD கணக்குகளுக்கான வட்டி தொகையினை அஞ்சலக சேமிப்பு கணக்கிலோ அல்லது வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கிலோ தானாகவே வரவு வைக்கப்படவேண்டும் என்பது கட்டாயமாக்க படுகிறது .

01.04.2022  முதல் SUNDRY  OFFICE ACCOUNT நிறுத்தப்டும் .இதனால் இதுகாறும்  MIS /SCSS/TD இவைகளுக்கான காலாந்திர வட்டி எடுக்கப்படாமல் இருந்தால் அது   SUNDRY  OFFICE ACCOUNT யில் சேர்ந்திடும்போது அதற்கான கூடுதல் வட்டி இல்லாமல் இருந்தது .இனிமேல் அவ்வாறு இல்லாமல் வாடிக்கையாளர்களின் சேமிப்பு கணக்கிற்கு செல்வதால் அதற்கான வட்டியும் கிடைக்கும் .இதை நாம் நமது வாடிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்துவது அவசியம் 

..இனிமேல் ஒரு அலுவலகத்தில் இருந்து வேறு அலுவலகத்திற்கு மாறுதல் செய்யும் போது அந்த கணக்கில் எந்த OUTSTANDING வட்டி தொகையும்  இல்லை என்பதை உறுதிசெய்தபின்தான் அந்த கணக்கை ஒரு அலுவலகத்தில் இருந்து வேறு அலுவலகத்திற்கு மாற்றமுடியும் .இது 02.04.2022முதல் அமுலுக்கு வருகிறது .இதை தலைமை அஞ்சலக APM உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும் 

இந்த புதிய நடைமுறை  சேமிப்பு பிரிவில் பணியாற்றும் தோழர்களுக்கும் SPM தோழர்களுக்கும் அவசியம் தெரிந்திருக்கவேண்டிய முக்கிய ஆணை ..மேலும் விவரங்களுக்கு நாம் மேலே பதிவிட்டுள்ள வீடியோவை பார்க்கவும் 

நன்றி தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

0 comments:

Post a Comment