...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, February 28, 2014

இன்று பணிநிறைவு பெறும் தோழர்கள் 
S .தியாகராஜன் APMSB ,C .உடையார் APMA/CS அவர்களுக்கு கோட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள் 

                         STR 

மார்க்சிஸ்ட்  தோட்டத்தில் மலர்ந்த செம்மலரே !
தீரா நெருக்கடியிலும் சோரா தீக் கதிரே !
NFPE ம நீயு ம்  ஒரே ஆண்டில் பிறந்தவர்கள் --அதனாலதான் 
என்னவோ இத்தனை பிடிப்பு இயக்கத்தில் 
சாபங்கள் வந்தாலும் சமரசத்தை ஏற்றதில்லை -ஆட்சியாளர்களுக்கு 
ஒருபோதும் சாமரம்  வீசியதில்லை 
விழு புன்களை விருதுகளாக சுமந்தவர் -விமர்சனங்களை அரு  மருந்தாக சுவைத்தவர் 
62 க்கு ஆசை படாதவர் -- 
16 ஐ  விரட்டியவர்  --ஆம் விதி                    
16 ஐ ஓசை படாமல் விரட்டியவர்
விடுப்பை சேர்க்க கணக்கு பார்த்து அலைந்ததில்லை --
விடுமுறை நாட்களிலும் வீட்டில் இருந்து பார்த்ததில்லை 
அதிகாரத்திற்கு அசை யாதவர் --
ஆசைக்கு இசை யாதவர் 
பணிநிறைவு நாளிலாவது கொஞ்சம் ஓய்வெடு --!
பொது வாழ்வு எனும் பெரிய உலகிற்கு புறப்படு 
  தோழர் பணிகள் தொய்வில்லாமல் தொடர 
தோழமை உணர்வோடு வாழ்த்துகிறேன்     
                                                SKJ 

                                             தோழர் உடையார் 

  அண்ணன் உடையார் 
பல பெருமைக்கு உடையார் -
சங்கங்களை  உடையார்  
ஆரம்பத்தில் கோவில்பட்டி பாசத்தோடு வந்தவர் 
அடுத்தடுத்து நம்மோடு இணைந்தவர் 
அறிவிக்கபடாத நமது ஆலோசகர்  --பதவிக்கு 
ஆசைபடாத அதிசயர்  
புயல் வந்தாலும் பொறுமை காத்தவர் -பூகம்பம் 
என்றாலும்  அமைதி கண்டவர் 
கணக்கு பிரிவிலும் தனக்கு நிகர் தானே --என்று 
தனி முத்திரை பதித்தவர் 
போலிகளின் அடையாளங்களை -அவ்வப்போது 
 பட்டியலிட்டு கொடுத்தவர் 
ராஜவல்லிபுரம் நதிக்கரையில் --தனி 
ராஜாங்கம் நடத்துபவர் 
தங்கள் பணிநிறைவு நாட்களில் 
மன நிறைவோடு வாழ வாழ்த்துகிறோம் 

                                                            வாழ்த்துக்களுடன் 
                                                        SK .ஜேக்கப்ராஜ்         


0 comments:

Post a Comment