...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Monday, January 11, 2021

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !

                           தமிழக மாநில சங்கங்களின் அறைகூவலின் படி நாளை 12.01.2021 அன்று நடைபெறும் ஆர்பாட்டத்தில் தாங்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம் .

                               அஞ்சல் நான்கின் மாநில மாநாட்டிற்கு வரவிருக்கும் தோழர்கள் உடனடியாக தங்கள் பெயர்களை பதிவிடுமாறு மீண்டும் நினைவூட்டுகிறோம் .

கடந்த 01.01.2020 முதல் நிறுத்திவைக்கப்பட்ட பஞ்ச்சபடி உயர்வினால் 2020 ஆண்டுகளில் பணிஓய்வு பெறுகின்ற ஊழியர்களின் ஓய்வூதிய பலன்களில் குறிப்பாக விடுப்பு மற்றும் கிராஜூடி இவைகளில் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளை கலைந்திட வேண்டி மாநிலங்களவை உறுப்பினர் திரு .பினோய் விஸ்வம் அவர்கள் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார் .

அஞ்சலகங்களுக்கு வரும் ஓய்வூதியர்களை மிகவும் உரிய மரியாதையுடன் நடத்தப்படவேண்டும் என்றும் சில ஓய்வூதியர்களை தேவைல்லாமல் அலைக்கழிக்கப்படுவதாக வந்த புகாரினை தொடர்ந்து  நமது தென்மண்டல PMG அவர்கள் 07.01.2021 அன்று அணைத்து கோட்டங்களுக்கும் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்கள் 

நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை 



0 comments:

Post a Comment