...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, January 29, 2021

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !

                                        பஞ்சப்படி முடக்கத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் 

நாள் --01.02.2021         திங்கள்  மாலை 6 மணி 

இடம் --பாளையங்கோட்டை தலைமை அஞ்சலகம் முன்பு 

 மத்திய அரசு ஊழியர்கள் மகாசம்மேளனம் மற்றும் நேஷனல் JCM அமைப்புகளின் சார்பாக மத்திய அரசு ஊழியர்களுக்கு மறுக்கப்பட்ட மூன்று பஞ்சப்படி உயர்வுகள் அதாவது நிறுத்திவைக்கப்பட்ட 11 சத பஞ்சபடியை உடனே வழங்கிட வலியுறுத்தி நடைபெறும் மத்திய அரசுக்கெதிரான ஆர்பாட்டத்தில் தாங்கள் அனைவரும் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம் .

ஏற்கனவே இதற்காக ஒருநாள் வேலைநிறுத்தத்தை நாம் செய்துள்ளோம் -இரண்டுமுறை ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருக்கிறோம் ..இதுபோன்ற பொது பிரச்சினைகளை முன்வைத்து போராடும் ஆற்றலும் வல்லமையும் நமது NFPE பேரியக்க உறுப்பினர்களுக்கு மட்டுமே உண்டு .என்பதனை .மறந்துவிடாதீர்கள் ...

பஞ்சப்படி முடக்கம் என்பது நமக்குமட்டுமல்ல --நம்முடன் பணிபுரிகின்ற GDS ஊழியர்கள் ஓய்வூதியர்கள் என அனைவருக்கும் இந்த பாதிப்புகள் உண்டு ..

11சதம் பஞ்சப்படி கிடைக்காததால் ஒவ்வொரு ஊழியருக்கும் ஒவ்வொரு மாதத்திலும் எவ்வளவு தொகை பாதிப்பு --ஓய்வு பெறுகின்ற ஊழியர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பு --தினந்தோறும்  ஏற்றம் கானும் விலைவாசி என நேர்முக மற்றும் மறைமுக தாக்குதலுக்கு  உள்ளானபிறகும் இதுபோன்ற  போராட்டங்களை நாம் இன்னும்  தீவிர படுத்தவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது ....வாருங்கள் அரசுக்கு எதிராக நமது எதிர்ப்பு குரலை இன்னும் உரக்க முழங்கிடுவோம் ---

                                                 வா தோழா ! போராட உன்னால் மட்டுமே முடியும் --போராட்டத்தாலே நம் வாழ்க்கை இங்கே விடியும் --பொது பிரச்சினைகளில் பங்கேற்கும் வாய்ப்பு உனக்கு மட்டுமே சொந்தம் -பெருமைகொள்வோம் இந்த மாபெரும் இயக்கத்தில் உறுப்பினர் என்பதிலும் அடுத்தவர்களுக்காக நாம் போராட அவதாரம் எடுத்துள்ளோம் என்பதை நினைத்தும் பெருமை கொள்வோம் ..      

ஆர்ப்பாட்ட வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை 





0 comments:

Post a Comment