...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, April 30, 2013

 29.04.2013 ஆர்ப்பாட்டம்   மாபெரும் வெற்றி பங்கேற்ற  அனைவருக்கும்   நன்றி .நன்றி .

        ஏழாவது சம்பளகுழு  அமைக்க வேண்டி மத்திய அரசு ஊழியர்கள் மகா 
சம்மேளனம் ,மற்றும் ரயில்வே ஊழியர் சம்மேளனம்  இணைந்து 
நடத்திய ஆர்ப்பாட்டம்  தோழர்  A .ஆதிமூலம்  அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது .சுமார் 200 க்கும்  மேற்பட்ட தோழர்கள் 
பங்கேற்றனர் . மேலும்  EPF ,வருமானவரி ,ஆல் இந்திய ரேடியோ ,
மத்திய கலால் ,SRMU  என  அணைத்து தோழர்களும் பங்கேற்றனர் .
புலி குட்டிக்கு  வேகத்தையும் , மீன் குஞ்சுக்கு நீந்தவும் யாரும் 
கற்று கொடுக்க வேண்டியதில்லை .அப்படி யாராவது போராட்டத்தை 
குறித்து  எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டும் என்று மனப்பால் குடித்தால் 
அது இடையூறு சக்திகளின் அரைவேக்காட்டை காட்டுகிறது .
  இப்படை தோற்கின் எப்படை  வெல்லும் என்ற உண்மையை  நெல்லைகோட்டம் 
நேற்று நிருபித்துள்ளது ..ஒற்றுமையை பாதுகாப்போம் .நம் செயல்பாட்டிற்கு 
இடையூறு செய்யும்  கோஷ்டி யை  பொறுத்து கொள்வோம் .

  நீதிக்கு இது ஒரு போராட்டம்   -- இதை நிச்சயம் 
 நெல்லை  பாராட்டும் .

                                       வாழ்த்துக்களுடன்  

                                                            SK .ஜேக்கப்ராஜ்      

   

0 comments:

Post a Comment