...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, October 20, 2015

                                                                    பாலு மறைந்தார் 
கண்ணீர் அஞ்சலி   


உன்னை போல் தலைவன் உண்டோ ?தம்பிகளிடம் 
உண்மையாய் இருந்ததொண்டோ ?
அண்ணனின் மரண செய்தி இடியாய் இடித்தது 
இதயத்தில் வெடியாய் வெடித்தது

அண்ணன் பாலு மறைந்துவிட்டார்-தொழிற்சங்கத்தில் 
எங்களை  வளர்த்து விட்ட தலைவன் போய் விட்டார்
நெருக்கடிகளில் சிங்கத்தின் கர்ஜனை -சோர்ந்து போகையில் 
சிறுத்தையின் வேகம் 
அதிகாரவர்கத்தின் சிம்ம சொப்பனம் -EDகளின் 
இதய சிம்மாசனம் 

வறுமை அண்ணனை விரட்டி கொண்டே வந்தது 
வெறும் கையாலே அதையும் வெற்றி கண்டே வந்தார் 
எதிர்பார்த்து எவரிடமும் நின்றதில்லை --எமனிடமும் 
அவ்வளவு எளிதாய் சிக்கியதில்லை 
 வெள்ளை நிற ஆடையில் உன்னை இனி பா ர்பதெப்போ ?
 வேங்கை குண பாய்ச்சலை இனி கான்பதெப்போ ?
வெள்ளை உள்ளம் கொண்ட தலைவனிடம் பேசுவதெப்போ ?
வேகத்தில்  தம்பிகளிடம் கோபத்தை வீசுவதெப் போ ?
19 ஆண்டுகள் அசைக்க முடியாத செயலர்  --ஓய்வுக்கு பிறகும் 
பல அண்டுகள் ஒதுக்க  முடியாத தலைவர் 
மறைவிற்கு பிறகும் மறுதலிக்க முடியாத மன்னவன்
மறைந்தும் மறையாத மாமனிதன்  

அழுவதற்கும் விழிகளில் கண்ணீர் இல்லை-ஏனென்றால் 
அண்ணன்  கொடுத்த உறுதி  நெஞ்சில் குறையவில்லை 
அனாதை ஆகிவிட்டோம் என்ற கவலையும் இல்லை-காரணம் 
அணியின் அஸ்திவாரம் என்றும்   குன்றவில்லை 
அண்ணன் வழியில் தொடர்ந்து உழைப்போம்
அவர் தன் கனவை முடிப்போம் 
                                                                            தம்பி 
                                                                       ஜேக்கப்ராஜ்



















0 comments:

Post a Comment