...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, August 3, 2017

அன்பார்ந்த தோழர்களே !
                            31 வது அகிலஇந்திய மாநாடு --அழைக்கிறது
                             பெருமைமிகு பேரவையே !பெருந்திராளாய் புறப்படு !
             அகிலஇந்திய அளவில் மீண்டும் தமிழக அஞ்சல் மூன்றின் பலம் அதிகரித்துள்ளது . சார்பாளர்களை பொறுத்தவரை மற்ற மாநிலங்களை   பின்தள்ளி தமிழகம் இன்று முதலாம் இடத்தை எட்டியுள்ளது .அதே போல் உறுப்பினர்கள் எண்ணிக்கையிலும் தமிழகம் முதல் இடத்தை பிடித்துள்ளது .தமிழகத்தை பொறுத்தவரை அஞ்சல் மூன்றின் உறுப்பினர் எண்ணிக்கை 7000 யை தாண்டி விட்டது .கோட்டங்கள் தோறும் அகிலஇந்திய மாநாட்டிற்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை நம்மை தலை நிமிர வைக்கிறது .பாட்னா அகிலஇந்தியமாநாட்டிற்கு அண்ணன் பாலு தலைமையில் தமிழகத்தில் இருந்து 800 கும் அதிகமானா தோழர்கள் அணிவகுத்து சென்றதை போல் இன்று பேரவை தலைவர் KVS -மாநிலசெயலர் JR தலைமையில் பெருமளவில் ஊழியர்கள் புறப்பட தயாராகிவிட்டனர் . மாநாடு வெல்லட்டும் -மற்றுமொரு சரித்திரத்தை பெங்களூரு சொல்லட்டும் .
                                                        பேரவை முரசு 
பேரவை உறுப்பினர்களுக்காக வெளியிடப்பட திட்டமிட்ட பேரவை முரசின் அறிமுக இதழ் நேற்று அந்தந்த கோட்ட செயலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது .தலைவர் KVS அவர்களால் இ(உ )றுதிசெய்யப்பட்ட Mailing list அடிப்படையில் அடுத்தமாதம் முதல் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக அனுப்பப்படும் .பேரவை வடிவமைப்பில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தவும் -சுட்டிக்காட்டப்பட்ட சில பிழைகள் எதிர்காலத்தில் சரிசெய்யப்படும் என தெரிவித்துக்கொள்கிறேன் .
இதழ் குறித்து மாநிலசெயலர் தோழர் JR அவர்களின் மதிப்பீடு உங்கள் பார்வைக்கு தரப்பட்டுள்ளது .

aipeup3tn tncircle

22:30 (7 hours ago)
to mekayveeyes
Very good  Jacob. 
First issue is very fine.  
I think, due to urgency in releasing the journal
before AIC,  some  typographical/oversight errors
couldnt be corrected.   
Your dedication, involvement is much appreciable.   
"இதனை இதனால் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து
அதனை அவன் கண் விடல்"   
That is now done by our Leader.  
Kudos to  Jacob.   
yrs  
J.R. 
நன்றி தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் 

0 comments:

Post a Comment