...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Monday, August 21, 2017

                                                           NFPE 
அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் 
மூன்றாம் பிரிவு -தபால்காரர் மற்றும் MTS
திருநெல்வேலி கோட்டம் --627001
-----------------------------------------------------------------------------------------------------------------
--------------------------------------------------------------------------------------------------------------
அன்பார்ந்த தோழர்களே !
                                    23.08.2017  ஒருநாள் வேலைநிறுத்தம் 
                                      பங்கேற்போம் ! பங்கேற்போம் !
நமது NFPE சம்மேளனத்தின் அறைகூவலுக்கு இனங்க வருகிற 23.08.2017 அன்று ஒருநாள் வேலைநிறுத்தம் நடைபெறுகிறது .நமது உறுப்பினர்கள் அனைவரும் முழுமையாகா இந்த அடையாள வேலைநிறுத்தத்தில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம் .
                                                 கோரிக்கைகள் 
அஞ்சல்பகுதியில் காலியாகவுள்ள PA -போஸ்ட்மேன் --MTS PASBCO --GDS உள்ளிட்ட காலியிடங்களை நிரப்பவேண்டும் 
கமேலேஷ் சந்திரா பரிந்துரையை அமுல்படுத்தவேண்டும் 
அஞ்சல் துறையில் 5நாள் நாள் கடைபிடிக்கப்பட்டு எல்லா சனிக்கிழமைகளும் விடுமுறை ஆக அறிவிக்கவேண்டும் 
தனியார் -காண்ட்ராக்ட் -மற்றும் வெளியாட்கள் முறையை நிறுத்தவேண்டும் 
புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்யவேண்டும் --குறைந்தபட்ச பென்ஷன்
கடைசி மாத ஊதியத்தில் 50 சதம் என்பதனை உறுதிப்படுத்த வேண்டும் .
உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் வேலைநிறுத்தத்தை வெற்றி பெறச்செய்வோம் .
                       களம் காணும்வங்கி  ஊழியர்களுக்கு  வீர வாழ்த்துக்கள் 
வங்கிகளை தனியார்மயம் -வங்கிகள் இணைப்பு இவைகளை எதிர்த்து 22.08.2017 அன்று வேலைநிறுத்தம் செய்யும் 10 லட்ச வங்கி ஊழியர்களுக்கு நெல்லை NFPE இன் வீர வாழ்த்துக்கள் 
                   தமிழக அரசு ஊழியர்கள் -ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் 
புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஜாக்டோ -ஜியோ கூட்டமைப்பு சார்பில் 22.08.2017 அன்று ஆசிரியர்கள் -தமிழக அரசு ஊழியர்கள் நடத்தும் வேலைநிறுத்தம் வெற்றிபெற வாழ்த்துக்கள் .முன்னதாக இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி 05.08.2017 அன்று சென்னையில் சுமார் 1.5 லட்சம் ஊழியர்கள் கலந்துகொண்ட மாபெரும் பேரணி -ஆட்சியாளர்களை அதிர வைத்தது குறிப்பிடத்தக்கது .
அஞ்சல் புறநிலை ஊழியர்களின் தொடர்போராட்டம் வெல்லட்டும் 
கடந்த 16.08.2017 முதல் நமது அஞ்சல் பகுதியில் -கமலேஷ் சந்திரா அறிக்கையை அமுல்படுத்தக்கோரி 16.08.2017 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் பங்கேற்று வரும் GDS ஊழியர்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள் .இதே கோரிக்கையை வலியுறுத்தி 2308.2017 அன்று நமது   சம்மேளனமும் ஒருநாள் வேலை நிறுத்தம் அறிவித்திருப்பது -போராடும் GDS ஊழியர்களின் கோரிக்கையை வலுப்படுத்தும் .
இப்படி அரசுக்கு எதிரான எல்லா தரப்பு உழைக்கும் வர்க்கத்தின் வேலைநிறுத்தங்கள் வெல்லட்டும் 
                                            வாழ்த்துக்களுடன் 
SK  .ஜேக்கப் ராஜ்                                                                                   SK .பாட்சா 
கோட்ட செயலர் P3                                                               கோட்ட செயலர் P4
------------------------------------------------------------------------------------------------------------------------------

0 comments:

Post a Comment