...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, November 29, 2017

தூத்துக்குடி கோட்ட அஞ்சல் மூன்றின் முன்னாள் கோட்ட செயலர் -மத்தியஅரசு ஊழியர் மகாசம்மேளனத்தின் அமைப்பு செயலர் தோழர் சங்கரகுமார் அவர்கள் பணிஓய்வு விழா30.11.2017



சங்கரகுமார் என்ற
சங்க நாதமே !
முத்துநகர் தந்திட்ட
முன்னணி தலைவனே !
பல்வேறு காலகட்டங்களில்
பொறுப்புகளை ஏற்க மறுத்தாய் -ஆனாலும் 
பொறுப்புகளை சுமந்தே நின்றாய்
கள்ளமில்லா நட்பு
களங்கமில்லா மனது -கொள்கை
கலப்பில்லா பிடிப்பு
கர்வங்கள் இல்லா சிரிப்பு
இவைகளெல்லாம் உந்தன் தனி சிறப்பு
இதயமெல்லாம் இளமையின் துடிப்பு

அதிகார வர்க்கங்களின்
சதிகார வலையில் சிக்கியதில்லை
மலிவான விளம்பரத்திற்க்காக
மாற்றார் மேடை ஏறியதில்லை
இளையவர்களை இழுத்துக்கொண்டு
இயக்கம் நடத்தவே துடித்தாய்
இயக்கத்தை இளமையாக்கவே
இளைப்பாறாமலே பயணித்தாய்

அஞ்சாநெஞ்சனின் பாசறையிலே
இறுதிவரை தொடர்ந்தாய்
அவர் தம்பி என தெரிந்ததில் இருந்து
என்னைக்கூட விடாமலே படர்ந்தாய்
முத் துநகருக்கும் நெல்லைக்கு ம் 
இடைவெளியை குறைத்தாய் 
முத்தமிழின் சுவைகூட்டியே
மேடைதோறும் முழங்கினாய் 

உன் பணிநிறைவு நாட்கள் 
சிறக்க வாழ்த்தி வணங்குகிறேன் 
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

0 comments:

Post a Comment