...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, December 1, 2017

அன்பார்ந்த தோழர்களே !
  நேற்று 30.11.2017 அன்று நடைபெற்ற மாதாந்திர பேட்டியில் விவாதிக்கப்பட்ட பிரச்சினைகளில் இருந்து ......
1.2015 முதல் பணியில் சேர்ந்த எழுத்தர்களுக்கு conformation உத்தரவு வழங்குவது குறித்து பேசுகையில் சுமார் 29 ஊழியர்களுக்கு நிரந்தர உத்தரவு வழங்கப்படவில்லை என்றாலும் இதுவரை சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட ஊழியர்களுக்கு உடனே conformation உத்தரவு வழங்க நடவடிக்கை எடுக்க உறுதி அளிக்கப்பட்டது 
2.C கிளாஸ் அலுவலகங்களுக்கு வழங்கப்பட்ட தரமற்ற UPS பேட்டரிகள் படிப்படியாக மாற்றப்படும் என்றும் தற்சமயம் 10 அலுவலகங்களுக்கு புதிய பேட்டரிகள் வந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
3.HSG II மற்றும் HSG I OFFICIATING யில் முதற்கட்டமாக இரண்டு பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது .விடுபட்ட ஊழியர்களுக்கு விரைவில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது .
4.சமீபத்தில் வந்த உத்தரவுப்படி SPEEDPOST வேலைநேரத்தை நீட்டிப்பதில் தனியாக அதற்கென PA ஒருவரை வேலைநேரத்தை மாற்றி பணியாற்ற அனுமதிக்கப்படும் என ஏற்றுக்கொள்ளப்பட்டது .
5.வேலை பளு அதிகமுள்ள அலுவலகங்களில் இருந்து டெபுடேஷன் தவிர்க்கப்படும் .( மூன்றடைப்பு .பொட்டல் புதூர்  வள்ளியூர் )
6.அம்பாசமுத்திரம் ASP குறித்த புகார்களை SSP அவர்களே நேரடியாக விசாரிப்பதாகவும் OFFICIATING பிரச்சினையில் கோட்டம் முழுவதும் ஒரே முறை பின்பற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது 
7.மாவட்ட ஆட்சியரின் உத்தரவு படி குறைந்தபட்ச கூலி ரூபாய் 320 OUTSIDER களுக்கு வழங்க அனைத்து தலைமை அஞ்சலகங்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது 
8.விடுபட்ட MACP பதவி உயர்வு குறித்து மறு DPC யில் சேர்க்கப்படவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது .
மற்றவை எழுத்துபூர்வமான பதில் வந்த பிறகு ...
தோழமை வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

0 comments:

Post a Comment