...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, March 20, 2018

       கேடர் சீரமைப்பு இரண்டாம் பட்டியல் மற்றும் அமுலாக்கம் தொடர்பான மாநில அளவிலான கருத்தாய்வு கூட்டம் நேற்று 19.03.2018 அன்று CPMG அலுவலகத்தில் நடைபெற்றிருக்கிறது ஊழியர் தரப்பில் மாநிலசெயலாரும்- பொருளாளரும் -.நிர்வாக தரப்பில் DPS (HOS) மற்றும் APMG Staff அவர்களும் கலந்துகொண்டனர் . .நமது மாநிலச்சங்க செய்திக்குறிப்பின் படி நமது ஆலோசனைகள் முழுமையாக ஏற்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்கள் .
1.கேடர் இரண்டாம் கட்டம் அமுலாகும் வரை எழுத்தர்களுக்கான RT யை நிறுத்திவைக்க வேண்டும் .
2.04.11.1992 க்கு பிறகானசர்கிள்  சீனியாரிட்டி பட்டியலை வெளியிட்டு சரி செய்ய வேண்டும் 
3.காசாளர் பதவிகளில் பணியாற்றும் LSG ஊழியர்களுக்கு முன்னுரிமை கொடுத்து அவர்களது விருப்பத்தின் அடிப்படையில் இடமாற்றம் செய்திடவேண்டும் .
4.Account பதவிகளை LSG ஆக அடையாளம் காட்டும்பொழுது சீனியர் Accountant விருப்பங்களை கணக்கில் கொள்ளவேண்டும் .அவர்கள் ஏற்கனேவே ஜெனரல் பகுதிக்கு சென்றிருந்தாலும் அவர்களுக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும் .
5.அனைத்து RULE 38 இடமாறுதல்களை கேடர் அமுலாக்கத்திற்கு முன் பரிசீலிக்க வேண்டும் .
6.NFG பதவிகளை உடனடியாக நிரப்பவேண்டும் .
 குறிப்பாக இந்த ஆண்டு சுழல் மாறுதல் சம்பந்தமாக CPMG அவர்கள் கூடிய விரைவில் இறுதி முடிவு எடுப்பார் என்று தெரிகிறது .
பாதிப்பில்லாத இடமாறுதல்கள் தான் அஞ்சல் எழுத்தர்கள் ஆண்டு தோறும் எதிர்பார்க்கும் முக்கியமான அம்சம் .அதனை நிறைவேற்றிட நாம் உறுதி கொள்வோம் .ஊழியர் நலன் காப்போம் .
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

0 comments:

Post a Comment