...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, March 31, 2018

   இன்று 31.03.2018 அன்று பணிநிறைவு பெறும் தோழர்களை வாழ்த்துகிறோம் 
நாள் 31.03.2018 
இடம் -வள்ளியூர் அஞ்சலகம் நேரம் மாலை 5 மணி 
 தோழர் E .சுப்ரமணியன் போஸ்ட்மாஸ்டர்SPM வள்ளியூர்  GRADE II 
பணியில் மிகுந்த ஈடுபாடு -நமது NFPE இயக்கத்திலும் முழு ஈடுபாட்டுடன் பணியாற்றியவர் .இக்கட்டான சூழ்நிலைகளில் நமக்கு சிறந்த ஆலோசகராக மிளிர்ந்தவர் .கண்டிப்பும் உண்டு கருணையும் உண்டு .அவர்களின் பணி ஓய்வு காலம் சிறக்க வாழ்த்துகிறோம் .
தோழர் சங்கரநாராயணன் PA வள்ளியூர் -ஆரம்பத்தில் தனது பணியை GDS யில் இருந்து தொடங்கி தபால்காரராக வளர்ந்து இன்று PA என தன் நிலையை உயர்திக்கொண்டவர் .தென்பகுதி NFPE இயக்கத்திற்கு கிடைத்திட்ட நங்கூரம் .எந்த புயலுக்கும் அஞ்சாது உறுதி காத்தவர் .எல்லா மாநாடுகளிலும் கலந்து கொண்டு நமக்கு ஆதரவினை அளித்தவர் .அவர்களையும் நாம் வாழ்த்தி வணங்குகிறோம் 
தோழர் ஜெயக்குமார் பன்னிர் தாஸ் -வள்ளியூர் உப கோட்டத்தில் பல நீண்ட காலமாக மெயில் ஓவர்சியர் ஆக பணியாற்றியவர் .எல்லா IP /ASP களிடம் ஒரு நன்மதிப்பை பெற்றவர் .அஞ்சல் நான்கு சங்கத்தின் கோட்ட உதவி தலைவராக பொறுப்பேற்றவர் .தோழரின் பணி ஓய்வு காலமும் சிறக்க வாழ்த்துகிறோம் .
 தோழமை வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

0 comments:

Post a Comment