...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, March 28, 2018

  27.03.2018 அன்று நடைபெற்ற கோட்ட செயற்குழு முடிவுகள் 







நெல்லை அஞ்சல் மூன்றின் செயற்குழு 27.03.2018 அன்று கோட்ட தலைவர் தோழர் KG.குருசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது .
 1.நெல்லை கோட்ட சங்கத்தின் 44 வது கோட்ட மாநாடு 22.04.2018 ஞாயிறு அன்று பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் வைத்து நடத்துவது 
2.மாநாட்டு நன்கொடையாக நமது உறுப்பினர்களிடம் ரூபாய் 200 நன்கொடை பெறுவது என்றும் உறுப்பினர்களுக்கு ரூபாய் 120 மதிப்பிலான 180 பக்க CSI கையேடு மாநாட்டு அன்று வழங்குவது 
3.நெல்லையில் CSI அமுலாக்கம் 22.05.2018 என நிர்ணயிக்க பட்டுள்ளதால் அதனை ஒட்டி ஒரு சில தினங்களுக்கு முன் CSI தொடர்பான பயிற்சி வகுப்புகள் நடத்துவது 
4.உறுப்பினர்கள் பட்டியல் சரிபார்க்கப்பட்டு மொத்த உறுப்பினர்கள் 195 (மாநாட்டில் கலந்து கொள்ள தகுதி படைத்தவர்கள் ) என இறுதி செய்யப்பட்டது .
5.கோட்ட மாநாட்டை புதிய பென்ஷன் திட்ட எதிர்ப்பு மாநாடாக நடத்துவது என்றும் தோழர் P.சேர்முக பாண்டியன் SR .ACCOUNTS OFFICER (R)புது டெல்லி அவர்களை அழைப்பது 
6.தொழிற்சங்கத்தில் மகளிர் பங்கு குறித்து பேசிட நமது அகில இந்திய சங்கத்தின் மகிளா கமிட்டி உறுப்பினர் தோழியர் வளர்மதி கோவை அவர்களை அழைப்பது 
7.CSI அமுலாக்கத்திற்கு பிறகு ஊழியர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து நமது மாநில சங்கத்தின் TECHNOLOGY WING பொறுப்பாளர் தோழர் சங்கரநாராயணன்  தூத்துக்குடி அவர்களையும் 
8.கேடர் சீரமைப்பின் அடுத்தப்பட்டியல் -மாநில நிர்வாகத்தின் டார்கெட் குறித்த நெருக்கடிகள் இவைகளை குறித்து நமது மண்டல செயலர் தோழர் சுப்ரமணியன் திண்டுக்கல் -தொழிற்சங்க ஒற்றுமையின் அவசியம் குறித்து மாநில உதவி தலைவர் தோழர் அய்யம் பெருமாள் அவர்களும் உரையாற்ற இசைந்துள்ளார்கள் 
 இதுபோக சென்ற ஆண்டினை போல தோழியர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும் .
 செயற்குழுவில் தோழியர் பசுமதி APM ACS அவர்கள் கொடுத்த அறிவுரைகளும் ஆதரவும் மாநாட்டின் வெற்றியை நேற்றே உறுதி செய்தது போல் இருந்தது 
 தோழர்களே !தோழியர்களே ! வழக்கம் போல் நமது மாநாட்டை வெற்றி மாநாடாக அமைந்திட இன்றே தயாராகுவோம் .

                    நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் 
                    இப்படை தோற்கின் எப்படை வெல்லும் -
 மாநாட்டு வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

0 comments:

Post a Comment