...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, March 21, 2018

யார் பேச்சை கேட்பது ? யார் பேச்சை கேட்டு நடப்பது ?

CBS CPC 20.03.2018 தனது கடிதத்தில் அஞ்சல் வாரிய அறிவிப்பை சுட்டி காட்டி 5 மணிக்குள் தங்கள் அலுவலக பணிகளை முடித்துவிட்டு EOD வேலையை தொடங்குங்கள் என அறிவுறுத்துகிறது .09.03.2018 விருதாச்சலத்தில் 23.25 வரை வேலை முடியாததை சுட்டிக்காட்டி அந்தந்த கோட்ட கண்காணிப்பாளர்களை அனைவருக்கும் அறிவுறுத்த சொல்லியிருக்கிறது ..15.30 மணிக்கு மேல் BO BAG வந்தால் அதை மறுநாள் கணக்கிற்கு கொண்டுவரவும் சட்டம் சொல்லியிருக்கிறது .PASS BOOK பிரிண்டர் இருக்கும் இடத்தில் PB ENTRY பிரிண்டர் மூலம் தான் போடவேண்டும் என SB உத்தரவு வலியுறுத்துகிறது .ஆனால் இன்று அதையெல்லாம் தாண்டி நிர்வாகமே விதி மீறலுக்கு ஊழியர்களை வற்புறுத்துவது ஏற்புடையது தானா ? இன்று கோட்ட அதிகாரிகளுக்குள்  போட்டி -உப கோட்ட அதிகாரிகளுக்குள்ளோ  போட்டா போட்டி ..ஆரம்பத்தில் SPM -PA -POSTMAN -MTS -GDS என்ற நிலைமாறி இன்று OUTSIDER  களுக்கும் இலக்கு நிர்ணயம் -இல்லையென்றால் ARRANGEMENT கிடையாது ....
என மனசாட்சிதனை கீழே இறக்கி வைத்துவிட்டு டார்கெட் பெயரில் குளிர் காயும் போக்கு தமிழகம் முழுவதும் தடையின்றி நடக்கிறது .
ஒரு சில இடங்களில் ஸ்பான்சர் மூலம் பணம் பி(ப )ரித்து பள்ளி குழந்தைகளுக்கு கணக்குகள் தொடங்குவது ஆரோக்கியமான விஷயம்தான் .வேறொரு இடத்தில் ரூபாய் 50000 MIS கணக்கில் முதலீடு செய்ய வந்தவரை ரூபாய் 100வீதம்  MIS கணக்குகள் பிரித்து தொடங்கப்பட்டதையும் மறந்துவிடக்கூடாது .அஞ்சல் துறையின் நோக்கம் சேமிப்பு திட்டம் உண்மையான வாடிக்கையாளர்களுக்கு  சென்றடைய வேண்டுமென்பதே .இலக்குகளுக்காக ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு உயர் அதிகாரிகளை ஏமாற்றுவது நம்மை நாமே ஏமாற்றுவதற்கு சமம் .
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 



0 comments:

Post a Comment