...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, May 8, 2020

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
                                        மாநிலச்சங்கத்திற்கு மனமார்ந்த நன்றி !நன்றி !
ஏழாவது சம்பளக்குழுவின் அமுலாக்கத்திற்கு பின் (01.01.2016 முதல் 25.07.2016) MACP பதவிஉயர்வு பெற்றவர்கள் தங்கள் ஆண்டு உயர்வினை மாற்றிட   கொடுக்கப்பட்ட OPTION  மீதான ஆடிட் அலுவலகம் பிறப்பித்துள்ள ஆட்சேபனையை ரத்துசெய்திடவும் இதனால் பலகோட்டங்களில்  ஊழியர்களுக்கு ஊதிய பிடித்தம்  என்ற நிலையை நீக்கிடவும் மீண்டும் CPMG அவர்களுக்கு இரண்டாம் முறையாக கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ள மாநில செயலர் தோழர் .வீரமணி அவர்களுக்கும் அன்புத்தலைவர் அறிவுஜீவி KVS அவர்களுக்கும் மேலும் இந்த பிரச்சினை குறித்து மாநிலச்சங்கத்தின் கவனத்திற்கு கொண்டு சென்ற நமது நெல்லை கோட்ட முன்னாள் செயலர் PSD திருநெல்வேலி மேனேஜர் தோழர் 
R .ஹரிஹரகிருஷ்ணன் அவர்களுக்கும் நெல்லை கோட்ட சங்கத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .
*நமது துறையில் உள்ள குரூப்   A மற்றும் குரூப் B (GAZETTED ) அதிகாரிகளுக்கும் இடமாறுதல் உத்தரவை அஞ்சல்வாரியம்  நிறுத்திவைத்துள்ளது ஏற்கனவே  குரூப் C  மற்றும் குரூப் B (NON -GAZETTED ) ஊழியர்க்ளுக்கும் சுழல் மாறுதல் உத்தரவுகள் மறு அறிவிப்பு வரும்வரை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது .
*ஏற்கனவே பரவிக்கொண்டிருக்கும் கொரானா பீதிக்குஇடையில் அஞ்சல்துறையில் AEPS கான சிறப்பு முகாம்களை மூன்றுநாட்கள் (09
052020 முதல் 11.02.2020) சிறப்புமுகாம் நடத்திட அஞ்சல் வாரியம் பிறப்பித்த உத்தரவினை ரத்துசெய்திட  பல்வேறு தரப்பில் இருந்தும் மாநிலநிர்வாகத்தை வலியுறுத்திவருகிறார்கள் 
*நமது கோட்டத்தில் 24..03.2020 முதல் ஊழியர்களின் விடுப்பினை ஒழுங்கு படுத்திட  கோட்ட நிர்வாகம் மிகுந்த ஆர்வம் காட்டிவருகிற்து .ஆகவே விடுபட்ட ஊழியர்கள் முறையான விடுப்பு விண்ணப்பங்களை விரைந்து கோட்ட அலுவலகத்திற்கு அனுப்பிடுமாறு கேட்டுக்கொள்கிறோம் .50 வயதினை கடந்தவர்களுக்கு 04.04.2020 வரை மருத்துவ சான்றிதழ் இன்றி COMMUTED LEAVE விண்ணப்பிக்கலாம்  
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்[பாகரன் 
கோட்ட செயலர்கள் நெல்லை 




0 comments:

Post a Comment