...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, May 19, 2020

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
                      அட்டையிடம் ரத்ததானம்  கேட்கலாமா ? கசாப்பு கடைக்காரனிடம்  காருண்யம் எதிர்பார்க்கலாமா ? 
  . ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் ஊழியர்களை பணிக்கு அழைக்கும்        (IPPB ) கோட்ட  மற்றும் உபகோட்ட அதிகாரிகளின் நடவடிக்கையை ரத்துசெய்திட  வேண்டி மாநில நிர்வாகத்திற்கு நமது  மாநில சங்கம்  கடிதம் எழுதியுள்ளது .இதுகுறித்து மாநிலச்சங்க தகவல் இதோ !இன்று CPMG அவர்கள் வெளியில் சென்றிருந்ததால் DPS HQ அவர்களை சந்தித்து  ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களிலும் ஊழியர்களை வேலைக்கு வரச்சொல்லி IPPB கணக்குகளை துவங்க சொல்லி கட்டாயப்படுத்துவது இயக்குனரகத்தின் உத்தரவிற்கு எதிரானது என்று இயக்குனரகத்தின் உத்தரவை சுட்டிக்காட்டி விவாதித்தோம் மாநில நிர்வாகம் போடப்பட்ட உத்தரவை  நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி பேசினோம் DPS HQ அவர்கள் அதற்கான உத்தரவை  வெளியிடுவதாக உறுதி அளித்துள்ளார்
*NFPE மாபொதுச்செயலர் தோழர் R N பராசர் அவர்கள் அஞ்சல்துறை செயலருக்கு IPPB அதிகாரிகளின் சர்வாதிகார அணுகுமுறைகள் குறித்து கடிதம் எழுதியுள்ளார். இந்த அணுகுமுறை தொடருமேயானால் நாடு முழுவதும் தொழிற்சங்க போராட்ட அறைகூவல் விடுக்க வேண்டிய கட்டாய ம் ஏற்படும் என்பதையும் தெரிவித்துள்ளார்.நோய்த் தொற்று குறித்து அச்சத்தில் இருக்கும் தபால் ஊழியர்களை மேலும் துன்புறுத்த வேண்டாம் என்று  IPPB‌ அதிகாரிகள் மற்றும் அஞ்சல்துறை அதிகாரிகளுக்கு தாங்கள் அறிவுறுத்தல்கள் வழங்குமாறு தங்களை கேட்டுக்கொள்கின்றோம்.
இந்த IPPB‌ அதிகாரிகள் மற்றும் அஞ்சல்துறை அதிகாரிகளின்  அணுகுமுறைகள் தொடர்ந்தால், நாடு முழுவதும் தொழிற்சங்க போராட்ட  நடவடிக்கைகளை தொடங்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாவோம் என்பதையும் தங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்." என‌ கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
நன்றி .தோழமையுடன் 
SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் அஞ்சல் மூன்று 
T.புஷ்பா கரன் கோட்ட செயலர் அஞ்சல் நான்கு -நெல்லை 
                                     

0 comments:

Post a Comment