...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, May 9, 2020

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
                                  கொரானா நோயினால் அஞ்சல் ஊழியர் மும்பையில் பலி --
  *மும்பை GPO வில் தபால்காரராக பணியாற்றிய தோழர் A.B.ஜெதி 
08.05.2020 அன்று கொரானா  தொற்றினால் பலியானார் .அதே GPO வில் பணியாற்றிய தோழியர் M.S.TALAWEDEKAR  எனும் எழுத்தர் மருத்துவமனையில் சிகிட்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் 
*சென்னை திருவல்லிக்கேனி அஞ்சலக ஊழியருக்கு கொரானா தொற்று உறுதிசெய்யப்பட்டதை தொடர்ந்து திருவல்லிக்கேனி அஞ்சலகம் மற்றும் அதன் வளாகத்திற்குள் செயல்படும் PSD மூடப்பட்டுள்ளது ..
                      இந்த பின்னணியில் அஞ்சல் வாரியம் அடுத்தடுத்த உத்தரவுகளை ஏவுகணை போல் ஊழியர்கள் மேல் பாய்ச்சுகிறது 
1.நமது  அஞ்சல் மாநில நிர்வாகம் பயோமெட்ரிக் முறையில் Aeps பணப்பரிவர்த்தனை செய்ய வற்புறுத்தி வருகிறது. ஆகவே மண்டல, கோட்ட நிர்வாகங்கள் Mela,
Mega mela  target அமைத்து தபால்காரர் ஊழியர்களைக் கொடுமைப்படுத்தி வருகிறது.
2.Operations at PostOffice Passport Sevak Kendra under Green & Orange Zone Districts shall resume functioning w.e.f 06th May 2020 ... MEA ()4-05-20)
          கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றுவோம் -தபால்காரர் சங்கம் வேண்டுகோள் 
   நாளுக்கு நாள் கொரானா வைரஸ் தொற்று நோய் பாதிப்பு அதிகரித்து நம்மை அச்சுறுத்தி வரும் வேளையில் ஊழியர்கள் அவர்தம் குடும்பங்கள், பொதுமக்கள் ஆகியோரின் நலனை கருத்தில் கொள்ளாமல் இதுபோன்ற உத்தரவிட்டுள்ளதை அதை தமிழ்மாநில NFPE சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. இலக்குகள் நிர்ணயித்து மேளாக்கள் மூலம் பணப் பரிவர்த்தனைகள் செய்யவேண்டுமென ஊழியர்களை நெருக்கடிக்கு உள்ளாக்குவது உடனடியாக கைவிடப்பட வேண்டும் என வலியுறுத்தி 09.05.2020,10.05.2020 &11.05.2020 ஆகிய நாட்களில் கருப்பு பட்டை அணிந்து பணத்தேவைக்கு கோரிக்கை விடுக்கும் பொதுமக்களுக்கு மட்டும் பரிவர்த்தனைகள்  செய்வது என தமிழ் மாநில அஞ்சல் நான்கின் சார்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
                    நமது கோட்டத்தில் வருகிற 11.05.2020 அன்று அனைத்து ஊழியர்களும்  கருப்பு பேட்ஜ்  அணிந்து பணியாற்றிடுவோம் இதற்கான பேட்ஜ்   உங்களுக்கு அனுப்பிவைக்கப்படும் .
                                          நன்றி தோழமையுடன் 
SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை 


0 comments:

Post a Comment