...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Monday, May 4, 2020

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! 
                                              முக்கிய செய்திகள் 
மத்திய அரசு ஊழியர்கள் மகா சம்மேளனத்தின் அறைகூவலின் படி மே தினத்தை முன்னிட்டு DA  முடக்க எதிர்ப்பு நாளாக நாடெங்கிலும் 
கடைபிடிக்கப்பட்டது .ஜூலை 2021 வரை DA முடக்கம் என்பதினை சர்வசாதாரணமாக மத்திய அரசு அறிவித்துள்ளது .அதனை தொடர்ந்து மாநில அரசுகளும் அதனதன் விருப்பத்திற்கேற்ப அரசு ஊழியர்களை குறிவைத்தே பல சலுகைகளை நிறுத்திவைத்துள்ளது .ஏற்கனவே ஒருநாள் ஊதியத்தை பிரதம மந்திரி அவர்களின் நிவாரண நிதிக்கு ஊழியர்கள் நன்கொடை கொடுத்துள்ளனர் .மேலும் மேலும் பொருளாதார நெருக்கடி என்ற பெயரில் ஊழியர்களின் மேல் திணிக்காதீர்கள் என மத்திய அரசு ஊழியர்கள் மகா சம்மேளனத்தின் சார்பாக வலியுறுத்தப்பட்டுள்ளது .
* புதிய உறுப்பினர்களை சேர்த்திடுவதற்கான காலநீட்டிப்பு ஜூன் 2020 வரை கொடுக்கப்பட்டுள்ளது .விடுபட்டவர்கள் யாரேனும் இருப்பதாக தெரிந்தால்  கோட்ட சங்கத்தை அனுகும்படி கேட்டுக்கொள்கிறோம் .RULE 38 இன் கீழ் வந்தவர்கள் தங்களுக்கு யூனியன் சந்தா பிடித்தம் செய்யப்படுகிறதா என்பதனை உறுதிபடுத்திக்கொள்ளவும் .
*தமிழகத்தில் மீண்டும் ADHOC அடிப்படையில் அதிகாரிகளுக்கு பதவி உயர்வுகள் வழங்கப்படுகின்றன .இந்த பயன்பாட்டை நமது பிரிவிற்கும் HSG I மற்றும் HSG II பதவிகளை நிரப்பிட மண்டல /மாநில நிர்வாகங்கள் முன்வருமா ?
*RULE 38 யின் இடமாறுதல்களை விரும்பும் தோழர்கள் ஜூன் மாதத்திற்குள் விண்ணப்பித்திடவேண்டும் (இலாகா மற்றும் GDS ஊழியர்கள் ) 
    நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாகரன் 
கோட்ட செயலர்கள் நெல்லை 

0 comments:

Post a Comment