...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, November 4, 2020

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! 

                             26.11.2020 ஒருநாள் வேலைநிறுத்தமும் -நமது மத்திய சங்க செயற்குழுவில் தமிழக அஞ்சல் மூன்றின் பங்கும் --

வருகிற 26.11.2020 அன்று மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ள ஒருநாள் பொதுவேலை நிறுத்தத்தில் பங்கேற்றிட நமது சம்மேளனமும் அழைப்புவிடுத்த பின்னணியில் நேற்று 03.011.2020 அன்று காணொளி மூலம் நடைபெற்ற மத்திய சங்க செயற்குழுவில் நமது மாநிலச்சங்கத்தின் சார்பாக வெளிப்படையான கருத்துக்களை முன்வைத்து விவாதித்தது வரவேற்கத்தக்கது .நமது மாநில செயலர் சகோதரர் வீரமணி அவர்களின் கருத்துக்களில் இருந்து சில ---

இன்றைய சூழலில் தமிழக அஞ்சல் மூன்றை பொறுத்தவரை போராட்டத்தைக்கண்டு முகம் சுளிப்பவர்கள் அல்ல -பொதுக்கோரிக்கைகளையோடு நமது பகுதி (துறை ) சார்ந்த கோரிக்கைகளில் முன்னுரிமை கொடுக்கவேண்டும் என்பதே ஒவ்வொரு அடிமட்ட ஊழியர்களின் எதிர்பார்ப்பு .குறிப்பாக அஞ்சல் எழுத்தர்களின் பிரதான கோரிக்கைகளான அஞ்சல் எழுத்தர்களுக்கான உயர் ஊதியம் ,LSG ,HSG உட்பட ,ஆட்பற்றாக்குறை ,HSG II மற்றும் HSG I  பதவிகளை ONE TIME RELAXATION அடிப்படையில் நிரப்புதல் ,நெட்ஒர்க் பிரச்சினைகள் .அஞ்சல் வாரியம் கட்டவிழ்த்துவிடும் வணிக டார்ச்சர் ,ஆதார் பணிகளுக்கு நிர்ணயிக்கப்படும் இலக்குகள் என நமது எழுத்தர் பிரிவு ஊழியர்களின் பிரச்சினைகளை சொல்லிக்கொண்டே போகலாம் .இன்றைய சூழலில் தமிழகத்தில் இருக்கும் 25 சத கோட்ட /கிளை செயலர்கள் இந்த பொது வேலைநிறுத்தம் குறித்து பல்வேறு வினாக்களை கேட்கத்தொடங்கிவிட்டார்கள். தங்களது பகுதி கோரிக்கைகளை முன்னிறுத்தி சம்மேளனம் /மத்திய சங்கங்கள் செய்தது என்ன என்று விவாதிக்க தொடங்கியிருக்கிறார்கள் .மேலும் வேலைநிறுத்த பாதிப்புகளில் ஒன்றான MACP பதவி உயர்வின் போது தங்களது ஆண்டு ஊதிய உயர்வை ஜூலையில் இருந்து ஜனவரிக்கு மாற்றிய தோழர்களுக்கு 2017 வேலைநிறுத்ததினால் ஏற்பட்ட  பாதிப்புகள் அதிகம் .இன்றும்கூட சமீபத்தில் MACP வாங்கிய தோழர்கள் தங்கள் ஆண்டு ஊதிய உயர்வினை ஜனவரிக்கு மாற்ற OPTION கொடுத்தவர்களுக்கு ஒருநாள் சம்பள பிடிப்போடு நிற்கப்போவதில்லை மாறாக ஆண்டு ஊதிய உயர்வும் தள்ளிப்போகும்  .இருந்தாலும் நாங்கள் மத்திய தொழிற்சங்க பொதுவேலைநிறுத்தத்திற்கு எதிரானவர்கள் அல்ல என்பதை தெரிவித்துக்கொள்கிறோம் .

1991 முதல் தொடங்கிய இந்த பொதுவேலைநிறுத்தம் இன்று 19 வது வேலைநிறுத்தமாகும் .இதில் நமது NFPE சம்மேளனமும் முழுமையாக பங்கேற்றுவருகிறது .பொருளாதாரா கோரிக்கைகளில் நேரடி பாதிப்புகள் மற்றும் .இன்றைய ஆட்சியாளர்களின் தொழிலாளர் நல விரோத சட்டங்களுக்கு எதிராக மத்திய அரசு ஊழியர்களில் இன்று போராடிக்கொண்டிருக்கும் துறைகளில்  நமது அஞ்சல் துறையின்  பங்கு  முக்கியமானது -அஞ்சலிலும் NFPE யின் பங்களிப்பு என்பதும் பெரிதானது .பொதுவேலைநிறுத்ததோடு இணைத்து நமது பகுதிவாரியான கோரிக்கைளை முன்வைத்து போராடுவதால் எந்தளவிற்கு நமது கோரிக்கைகளின் மீது அரசின் கவனம் திரும்பும் என்ற ஒரு சராசரி உறுப்பினரின் கேள்விகளுக்கு பதில்சொல்ல வேண்டிய பொறுப்பும் நமக்கிருக்கிறது .வங்கிகள் தங்கள் கோரிக்கைகளுக்குகாக மட்டுமே எத்தனை போராட்டங்களை நடத்திக்கொண்டிருக்கிறது .நமது வரலாறு 1993 ,1998, 2000 .2008 என்று நிற்கப்போகிறதா ? நமது துறைசார்ந்த கோரிகளுக்காக போராட இன்றும் ஊழியர்கள் தயாராக இருக்கிறார்கள் ..என்றும் ஊழியர்கள் தயாராக இருக்கிறார்கள் ..ஊழியர்களின் நியாமான கோரிக்கையில் இருக்கும் உண்மையை எடுத்துசசொல்லுவோம் ..

போராட்டங்கள் வெல்லட்டும் --வெல்லட்டும் 

நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

1 comment:

  1. GINDHABATH gindhabath inclop gindhabath.Our nation's second big government department is India post.If we participate the strike it covers Kashmir to Kanyakumari.Victory is our history.But now I request our NFPE TAMILNADU-circle and Tirunelveli Division branches strongly put a demand PENSION FOR OUR GDS-comrades.
    Before independence our all India leaders like COMRADE PIRAMANATHAN and other leaders transfer more than 1000 Kilometres,.But our NFPE rectify those punishments.
    Now a days we get reasonable salary is come from our elder leader's hard work.Some of them give their life also.
    Hence we are defenately win the peaceful war one day strike.And save our Postal department.Also we gain our Postal side demands.
    Who not give their support their department is destroying by administration.It is strong history.
    Victory is ever employees side.
    One of your comrade

    K.PONNURAJ
    Ex.EDDA/MC.
    SANKARNAGAR.
    4-11-2020

    ReplyDelete