...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, October 25, 2017

                                அதிசயம் ..ஆனால் உண்மை 
அஞ்சலக ஆய்வாளர்களுக்கு தகுதி ஊதியம் 4600 ஆக உயர்கிறது .இந்த உயர்வு 01.01.2006 முதல் அமுலுக்கு வருகிறது .
ஆறாவது ஊதியக்குழு பரிந்துரைத்த ஆய்வாளர்களுக்கு உயர் ஊதியத்தை அன்றைய அரசு நிராகரித்தது .அதனால் ஆய்வாளர்கள் சங்கம் எர்ணாகுளம் நீதிமன்றத்தை அணுகி நீண்ட சட்ட போராட்டங்களை நடத்தி அஞ்சலக ஆய்வாளர்களுக்கு தகுதியூதியம் 4200 இல் இருந்து 4600 ஆக பெற்றுள்ளனர் .முன்னதாக இழுத்தடித்துக்கொண்டிருந்த அரசுமத்திய நிதியமைச்சகத்தையும் வழக்கில் ஒன்றாக சேர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில் அஞ்சல் வாரியம் 24.10.2017 அன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது  .இனி IPO சம்பளம் HSG I க்கு நிகராக மாறுகிறது .ஆனாலும் இதில் இன்னொரு அம்சம் பார்க்கவேண்டியுள்ளது அதே உத்தரவில் ASP களின் ஊதியம் அதே 4600 .எது எப்படியோ நம்மை போல் களம் காணாமல் -பாதிப்புகள் இல்லாமல் -போராட்டம் இல்லாமல் -ஆர்ப்பாட்டம் நடத்தாமல் -தர்ணா நடத்தாமல் -பேரணி -ஊர்வலம் என எதுவும் இல்லாமல் இந்தவெற்றியை பெற்றிருக்கும் ஆய்வாளர்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள் .களம் எதுவாக இருந்தாலும் அதை சரியாக பயன்படுத்துபவர்களுக்கு வெற்றி அவர்களது வாசற்கதவை தட்டும் என்பதற்கு இந்த வழக்கும் -உத்தரவும் மிகச்சிறந்த உதாரணம் .
குறைந்தபட்ச ஊதியம் --MACP குளறுபடிகள் - HRA மாற்றம் -போனஸ் பார்முலா திருத்தம் GDS கோரிக்கைகள் என்ற நமது களம் என்னானது ?சிந்திப்பீர் --தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் நெல்லை 












3 comments:

  1. Wow welcome the judgement on, what about the RTP case, government is dragging the case, please resolve

    ReplyDelete