...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, October 20, 2017

அண்ணன் பாலு அவர்களின் நினைவுகளை குறித்து முன்னாள் நிர்வாக பிரிவின் தமிழ்மாநில செயலர் தோழர் அரவிந்தன் சிங்கப்பூரில் இருந்து பகிர்ந்த கவிதை 

ஒரு போராட்டம் முடிவுற்றது
---------------------------------------------------


பாலு-

அஞ்சல் ஊழியரின்
அரிமா!
அதிகாரவர்க்கத்திற்கு
அணுகுண்டு!
வெஞ்சினங்கொண்ட 
வேங்கை!
உன் 
வேட்டையில் கொழுத்தவை
கழுகுகள் !
வஞ்சனை வறுமையால் 
வளம் குறைந்தாய் -உடல் 
நலம் குறைத்தாய் !
அன்று-
2000 டிசம்பரில் 
நீ நடத்தியது போராட்டம்!
இன்று-
ஆண்டுதோறும்அறிவிக்கப்படும் 
காட்சித்தேரோட்டம் !
ஒரு போராட்டம் 
முடிவு பெற்றது!

வாழ்க பாலு !
(அரங்க அரவிந்தன் @சிங்கப்பூர்)

0 comments:

Post a Comment