...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, October 18, 2017

                 தமிழக NFPE தொழிற்சங்க வரலாற்றில்   மீண்டும் ஒரு மகத்தான சாதனை --
RMS மூன்றாம் பிரிவின் முன்னாள் மாநில தலைவர் தோழர் KR .கணேசன் அவர்கள் மற்றும் அவரோடு சதன்குமார்  என்றொரு MTS தோழர்கள் இருவரும் மீண்டும் பணிக்கு 
எடுத்துக்கொள்ள பட்டர்கள் .இந்த மாபெரும் உதவியை செய்துகொடுத்த  நமது தமிழக CPMG அவர்களுக்கும் கோவை மண்டல PMG அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம் .இந்த பிரச்சினையில் தொடர்ந்து ஈடுபட்டு வெற்றிக்கனியை பறித்துக்கொடுத்த தமிழக NFPE ஒருங்கிணைப்பு குழுவிற்கு எங்கள் வாழ்த்துக்கள் .
   பார்சல் தொலைந்துபோனதாக சொல்லப்பட்ட  வழக்கிற்க்காக -சம்பந்தம் சம்பந்தம் இல்லாத நிர்வாகிகள் வேண்டுமென்றே பணியில் இருந்து REMOVED FROM SERVICE செய்யப்பட்டவர்கள் இந்த குறுகிய காலத்திற்குள் மீண்டும் பணிக்கு வருவது சாத்தியமல்ல ..
ஆம் சாதித்தது சங்கம் ..கருணைகாட்டியது மேலதிகாரிகளின் நெஞ்சம் .
                                அன்று ஒரு சுடலைமுத்து ......
இதே போல் 1983 வேலைநிறுத்தம் அறிவித்து அது விலக்கி கொள்ளப்பட்டது தெரியாமல் மதுரை தோழர் சுடலைமுத்து அவர்கள் வேலைநிறுத்தம் செய்த குற்றச்சாட்டிற்காக   இதேபோல் REMOVED FROM SERVICE செய்யபட்டர்.அன்று மாநிலசெயலர் அண்ணன் பாலு .மதுரை மண்டலச்செயலர் தோழர் பாண்டியன் .இந்த அநியாய தண்டனையை எதிர்த்து மிக ராஜதந்திரமாக வாதாடி  மூன்றே மாதத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட தோழர் சுடலைமுத்து மதுரையில் அஞ்சல் மூன்றின் மாநிலசெயலர் அண்ணன் பாலு அவர்களால் மீண்டும் பணிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டார் .அன்று அஞ்சல் மூன்று மட்டும் தனித்து நின்று சாதித்துக்காட்டியது என்பது குறிப்பிடத்தக்கது .(பலமாநில  மாநாடுகளில் இது குறித்த கோஷங்கள்  அனல்  பறக்கும்-தெறிக்கும்  )
  ஆக REMOVED FROM SERVICE என்பது எவ்வளவு கொடூரமான ஆயுதம் .அதை ஏன் சில அதிகாரிகள் மிக சர்வசாதாரணமாக பிரயோகிக்கிறார்கள் என்பது தெரியவில்லை .இப்படி சொந்த விருப்பு -வெறுப்பு அடிப்படையில் தொழிற்சங்க நிர்வாகிகளை தண்டித்து மகிழும் அதிகாரிகளை ஏன் தவறான தண்டனை கொடுத்தாய் என்று நீதிமன்றமாவது மேலதிகாரியாவது கேள்விகேட்டு தண்டிக்கும் காலம் வந்தால்தான் இதுபோன்ற கொடூர அதிகாரிகள் திருந்துவார்கள் .தோழர் கணேசன் இன்று பணிக்கு வந்துவிட்டார் .இந்த இடைப்பட்ட காலங்களில் அவரது குடும்பமும் -அவரும் எந்த மனநிலையில் இருந்திருப்பார்கள் என்று யாருக்கு தெரியும் .இன்னும் ஒருநாள் வேலைநிறுத்தத்திற்க்காக RULE 16 இல் தண்டனைகளை சுமந்துள்ள 60 கும் மேற்பட்ட CB கோட்ட RMS தோழர்களுக்கும் முழு தண்டனைகளும் ரத்து செய்யப்படவேண்டும் என விரும்புகிறோம் .இந்த பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு சட்டரீதியான உதவிகளை செய்துவரும் அஞ்சல் மூன்றின் முன்னாள் தென்மண்டல செயலர் அண்ணன் சின்ராஜ் அவர்களுக்கும் எங்கள் வாழ்த்துக்கள் .

  ஒன்று பட்ட போராட்டம் 
 வென்று காட்டும் நிச்சயம் ......
எவ்வளவு உன்னதமான -உயிரோட்டமான  வரிகள் 
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

0 comments:

Post a Comment