...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, October 11, 2019

                                                முக்கிய செய்திகள் 
அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !வணக்கம் .
                 நேற்று 10.10.2019 அன்று நடைபெற்ற மாதாந்திர பேட்டியில் எடுக்கப்பட்ட முடிவுகள் உங்கள் பார்வைக்கு தரப்பட்டுள்ளன .இதன் மீதான தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன .
1.தோழர் வெண்ணிக்குமார் payfixation தொடர்பாக அவருடைய service book இன்று பாளையம்கோட்டை HO விற்கு அனுப்பப்பட்டு மறுநிர்ணயம் செய்யப்படும் .
2.திருநெல்வேலி PSDக்கு  இரண்டு OA பதவிகள் விருப்பமனுக்கள் கோரப்பட்டு நிரப்பப்படும் .
3.LGO தேர்வுக்கான VACANCY கணக்கெடுப்பில் PSD நம்மோடு இணைந்ததை தொடர்ந்து அங்குள்ள PA VACANCY களை இந்த ஆண்டு PA VACANCY யில் சேர்த்திட மண்டல அலுவலகத்திற்கு பரிந்துரைக்கப்படும் 
4.தோழர் துளசிராமன் அவர்களின் விடுப்பு முடிந்தவுடன் நான்குனேரியில் பணியாற்றிட அனுமதிக்கப்படுவார் .
5.தெற்குகருங்குளத்திற்கு கூடுதலாக ஒரு நபர் டெபுடேஷன் அனுப்பப்படுவார் .மூன்றடைப்பிற்கு SPM  PA  எப்பொழுது தேவை என கேட்கும்பொழுது அவருடைய வேண்டுகோளின்படி DEPUTATION கொடுக்கப்படும் 
6.நாலுமுக்கு மற்றும் மாஞ்சோலை அலுவலகங்களுக்கு குடியிருப்பை தற்காலிகமாக ரத்துசெய்துவிட்டு அவர்களுக்கு HRA வழங்கப்படும் 
7.திருநெல்வேலி தலைமை அஞ்சலக வளாகத்திற்குள் தேங்கும் மழைநீர் பிரச்சினையை தீர்க்க புதிய கொட்டேஷன் வாங்கி அனுப்ப ஏற்றுக்கொள்ளப்பட்டது 
8.மானுர் அஞ்சலகத்திற்கு புதிய பிரிண்டர் உடனே DIVERT செய்ய ஒப்புக்கொள்ளப்பட்டது 
9.இட்டமொழி அஞ்சலத்திற்கு CASH OFFICE மற்றும் மெயில் OFFICE வள்ளியூருக்கு பதிலாக திசையன்விளைக்கு மாற்ற பரிசீலிக்கப்படும் 
10.மூலைக்கரைப்பட்டி பாஸ்புக் பிரிண்டர் புதிதாக சப்ளை செய்யப்படும் 
11.களக்காடு SO விற்கு பிராட்பாண்ட் வேகத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் 
12.கீழநத்தம் மற்றும் மூலைக்கரைப்பட்டி அலுவலகங்களுக்கு கட்டிட பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டன .
13.CGHS மூலம்  திருநெல்வேலிக்கு அங்கீகரிக்கப்பட்ட  மருத்துவமனை பட்டியலை உடனே வெளியிட மண்டலஅலுவலகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் .குறிப்பாக அகர்வால் ஷிபா மருத்துவமனைகள் இதில் அடங்கும் 
14.MACP பதவி உயர்வு வேலைகள் துரிதப்படுத்தப்படும் .சீனியாரிட்டி பாதிப்புள்ள தோழியர் ராஜலட்சுமி அவர்களின் பெயர் இதில் சேர்க்கப்படும் 
15.பெருமாள்புரம் அலுவலக பராமரிப்பு பணிகள் குறித்து ஏற்கனவே மண்டல நிர்வாகத்திற்கு எடுக்கப்பட்டுள்ளது 
                                               தபால் காரர் பிரச்சினைகள் 
1.வள்ளியூர் அலுவலகத்திற்கு ஒரு கேஷ்ஓவர்சியர் பதவி வழங்கப்படும் .
2.விரிவாக்க பகுதியான பணகுடி மற்றும் தாலுகா  தலைமை யிடமான    ராதாபுரம்  அலுவலகங்களுக்கு புதிய கணக்கு  எடுக்கப்பட்டு JUSTIFICATION  இருக்கும் பட்சத்தில்  கூடுதல் தபால்காரர் வழங்கப்படும் 
3.COMBINATION DUTY அலவன்ஸ்  உடனுக்குடன் வழங்க  உத்தரவிடப்படும் .இதுவரை வாங்காத அலுவலகங்களுக்கு பின்னர் சரிபார்த்து வழங்கப்படும் .ஆகவே COMBINED DUTY போட்டால் அன்றே ரூபாய் 94 க்கு மணிரசிது போட்டு வாங்கிக்கொள்ளவும் .யாராவது மறுத்தால் கோட்ட செயலருக்கு உடனே தெரிவிக்கவும் 
4.விடுமுறை நாட்களுக்கு பணியாற்றிய ஊழியர்களுக்கு  இன்சென்டிவ் கிடைக்க சம்பந்தப்பட்ட SPM மூலம் கோட்ட அலுவலகத்திற்கு பணியாற்றிய ஊழியர்களின் விவரங்களை அனுப்பச்சொல்லவும் .தானாக ஒருநாளும் வராது .
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

0 comments:

Post a Comment