...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, October 26, 2019

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !
                உங்கள் அனைவருக்கும் எங்கள் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் .
                     வெற்றிகரமாக நடைபெற்ற 32 வது அகிலஇந்திய மாநாடு 
 நமது சங்கத்தின் அகிலஇந்திய மாநாடு 20.10.2019 முதல் 23.10.2019 வரை நான்கு நாட்கள் ஹைதெராபாத் மாநகரில் மிகச்சிறப்பாக நடைபெற்றது .நமது அகிலஇந்திய தலைவர் தோழர் J.ராமமூர்த்தி அவர்கள் தலைமைதாங்கி சிறப்பாக நடத்தி காட்டினார்கள் .முதல்நாள் நடந்த நிகழ்ச்சியில் Shri P. K. Bishoi, Member (Personal) & Designated Secretary (Posts)  Shri Charls Lobo Chief PMG, Karnataka holding additional charge of Telangana Circle ஆகிய நமது துறையை சார்ந்த உயர் அதிகாரிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர் .மாநாட்டின் இறுதிநாளில் நமது முன்னாள் பொதுச்செயலர் தோழர் KVS  அவர்களின் உரை சார்பாளர் /பார்வையாளர்களுக்கு சிறப்பான விருந்தாக இருந்தது.பொதுச்செயலர் தோழர் RN .பராசர் அவர்களின் எதார்த்த விளக்கமும் ஏற்றுக்கொள்ளும் வகையில் அமைந்தது  நாடுமுழுவதிலும் இருந்து 711 சார்பாளர்களும் இரண்டாயிரத்திற்கு மேலான பார்வையாளர்களும் கலந்து கொண்டனர் .
                     மீண்டும் தமிழகத்தின் ஆதிக்கம் தொடர்ந்தது 
 பழைய நாட்களை போலவே இந்த மாநாட்டிலும் நம் தமிழகத்தின் பங்கு சிறப்பாக இருந்தது .தமிழகத்தில் மட்டுமே 120 சார்பாளர்கள் பங்கேற்றனர் .நிர்வாகிகள் பட்டியலிலும் நமது மாநிலத்திற்கு மூன்று முக்கிய பதவிகள் வழங்கப்பட்டன .
தலைவராக தோழர் N .சுப்பிரமணியம் (திருப்பூர் )
பொதுச்செயலராக தோழர் RN .பராசர் (உத்தரபிரதேசம் )
நிதிச்செயலராக தோழர் பல்விந்தர் சிங் (டெல்லி )
உதவி பொதுச்செயலராக தோழர் A .வீரமணி (அண்ணாசாலை )
அமைப்பு செயலராக தோழர் AM .சேகர் (உதக மண்டலம் )ஆகியோர் தேர்வுசெய்ய பட்டர்கள் .
மகிளா கமிட்டி நிர்வாகிகளாக தமிழகத்தில் இருந்து மூன்று தோழியர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள் .தோழியர் A.வளர்மதி (கோவை ) J.ரேணுகா (திருவாரூர் ) M.சாந்தி (கோவை ) 
தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து நிர்வாகிகளுக்கும் நெல்லை NFPE சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் .
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

0 comments:

Post a Comment