...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, May 21, 2020

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
                   கண்களை விற்று சித்திரம் வாங்கினால் ................
                          மத்திய அரசின்  தனியார்மய /மக்கள் விரோத கொள்கை முடிவுகளை  எதிர்த்து மத்தியஅரசு ஊழியர்களின் கருப்பு அட்டை இயக்கம் -22.05.2020 --மத்தியஅரசு ஊழியர் மகாசம்மேளன அறைகூவல் 
                        நமது நாட்டின் முக்கிய துறைகளான பாதுகாப்பு தளவாடங்கள் அனுசக்தி  சிவில் விமானபோக்குவரத்து நிலக்கரி மற்றும் கனிமவளங்கள்  உள்ளிட்ட அரசுத்துறை நிறுவனங்களையும் பொதுத்துறை நிறுவனங்களையும் தனியார் வசம் கொடுத்திட  மத்தியஅரசு முடிவெடுத்துள்ளது ..பேராபத்து நிலவும் இந்த காலகட்டத்திலும் அரசு அனைத்து நிறுவனங்களையும் மொத்த விலைக்கு விற்பதற்கு வெளியிட்டுள்ள அறிவிப்பு உயிர்காக்கும் போராட்ட காலத்தில்   கூட  உரிமையை காக்கும்  .போராட்டத்தில் நாம் பங்கேற்கவேண்டிய அவசியத்தை உணர்த்தியுள்ளது மேலும் தொழிலாளர் சட்ட திருத்தங்கள் என்ற பெயரில் .பல மாநிலங்களில் தொழிலாளர் உரிமைகள் முடக்கப்பட்டு வேலைநேரத்தை அதிகரித்தது ஊழியர்களின் பஞ்சபடியை 18 மாதங்களுக்கு நிறுத்திவைப்பு  பாதுகாப்பு துறையில் 74 சதம் வரை வெளிநாட்டு முதலீட்டுக்கு அனுமதி உள்ளிட்ட ஊழியர் விரோத மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து நாளை நடைபெறும் கருப்பு அட்டை இயக்கத்தை வெற்றிகரமாக நடத்திட வேண்டுகிறோம் ..வழக்கம்போல் நாளை காலை உங்கள் அனைவருக்கும் கருப்பு பேட்ஜ் அனுப்பிவைக்கப்படும் .தோழர்கள் /தோழியர்கள் அனைவரும் நாளை ஒருநாள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றிட  கேட்டுக்கொள்கிறோம் .
உலக முதலாளிகளுக்கு, மனித வளத்தைச் சுரண்டும் வேட்டைகாடாக இந்தியா மாற்றப்படுகிறதா ? எங்கள் செல்வங்கள் மீண்டும் கொள்ளை பொருளாகிறதா ? என்ற கேள்வி தவிர்க்க இயலாததாக இருக்கிறது. இவைகளை அனுமதிக்கக் கூடாது என்பதே, தொழிலாளர் ஆதரவு இயக்கங்களின் நோக்கமாகும்.. எனவே தான் போராட்டம் தவிர்க்க முடியாததாக உள்ளது. போராட்டத்திற்குப் பின்னர் தான், தொழிலாளி மீது தொடுக்கப் படும் தாக்குதல்கள் வெளி உலகிற்கு தெரிய வருகிறது. , கண்களை விற்று சித்திரம் வாங்கினால் கைகொட்டி சிரியாரோ என்பதை நினைவில் கொள்வது நல்லது.
நன்றி தோழமையுடன் 
SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் அஞ்சல் மூன்று 
T .புஷ்பாகரன் கோட்ட செயலர் அஞ்சல் நான்கு நெல்லை 
              



1 comment:

  1. Vanakkam.
    Our nation is now fight with covid19.Each government staff service to nation with bravely.
    In the critical situation why central government announced to privatisation important and good profit departments.After all government departments go to private,and feature who respect our administration leaders.After money go to private business man hand his aim only improve his profit.But the profit in government hand the political leaders who in administration power,spending money to poor people and built New industries and give employment to youngsters.
    If central government with big profit departments in his hand other private business men respect government of India and state government.Hence we show our protest against privatisation of important government department and military workshops .VICTORY EVER IN HANDS OF WORKERS.
    INDIA IS ONE OF BIG COUNTRY.CENTRAL GOVERNMENT DEPARTMENTS ONLY THE POWER OF OUR ADMINISTRATION AND JOINT ALL STATE GOVERNMENTS.
    GINDHABATH GINDHABATH WORKER'S UNITY GINDHABATH.
    One of your comrade,
    K.PONNURAJ
    Retired P.A.
    TIRUNELVELI H.O.
    21.5.2020.

    ReplyDelete