...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Monday, November 2, 2020

அன்பார்ந்த  ஓய்வூதியர்களே ! வணக்கம் .

நெல்லை கோட்ட தேசிய அஞ்சல்  ஆர் .எம் .எஸ் ஓய்வூதியர்கள் முன்னனி (NATIONAL FRONT OF POSTAL RMS  PENSIONERS ) துவக்கம் .

அஞ்சல் RMS ஓய்வூதியர்கள் மற்றும் குடும்பஒய்வூதியர்க்ளுக்கான NFPRP எனும் புதிய அமைப்பு நேற்று நெல்லையில் தொடங்கப்பட்டது .இந்த அமைப்பு ஏதோ புதிய அமைப்போ அல்லது வேறு எந்த அமைப்பிற்கோ போட்டியாக துவங்கப்பட்டதல்ல .ஏற்கனவே நெல்லையில் நம்முடைய ஆசான் தோழர் M .பேச்சிமுத்து அவர்கள் தலைமையில் இயங்கி வந்த ஓய்வூதியர் சங்கமான மத்திய அரசு ஊழியர்கள் அமைப்பு நம்மோடு இணைக்கப்பட்டு அனைவரையும் ஒரு குடையின் கீழ் அரசியல் கேடர் வேறுபாடுகளைக்கடந்து தொழிற்சங்கத்தில் அணிசாரா கொள்கையான நடுநிலையாளர்களின் கொள்கைவழி நடக்கின்ற பேரமைப்பாகும் என்பதை நமது தோழர்கள் புரிந்துகொள்ளவேண்டும் .நேற்றைய துவக்க நாளிலே பெருமைப்பாண்மை தோழர்கள் தங்களை உறுப்பினர்களாக இணைத்துக்கொண்டதை மகிழ்வோடு தெரிவித்துக்கொள்கிறோம் .

                                        NELLAI NFPRP புதிய நிர்வாகிகள் 

தலைவர் .தோழர் A.ஆதிமூலம் 

உதவி தலைவர்கள் -A.ராமசுந்தரம் (RMS)-O.மூக்கையா -R.நடராஜன் M.கலிய பெருமாள் E.சுப்ரமணியன் (RMS) I.மகாராஜன் 

கன்வீனர் --KG.குருசாமி (PRIP ---RETD )

துணைகன்வீனர்கள்  -T.சுடலையாண்டி A.அமிர்தராஜ் -S .நமச்சிவாயம் (RMS)

பொருளாளர் -SK .பாட்சா 

உதவி பொருளாளர் -A.அந்தோணி 

நிர்வாக குழு உறுப்பினர்கள் -S.முருகன் V.சீனிவாசன் M.அந்தோணி சாமி E.மாணிக்க வாசகம் (RMS) PK .சுடலைக்கண்ணு A.பிரான்சிஸ் சேவியர் A.நீல்வின் M.பேச்சியப்பன் 

மகிளா கமிட்டி -கன்வீனர் -கிரேஸ் எலிசபெத் 

தலைமை ஆலோசகர் -தோழர் SN .சுப்பையா (RMS)

கவுரவ ஆலோசகர்கள் -தோழர்கள் S.சௌந்தரபாண்டியன் T.வெங்கட்ராமன் S.முத்துகிருஷ்ணன் 

                                                             தீர்மானங்கள் 

1.நெல்லை கோட்டத்தின் ஒருங்கினைந்த மாநாடு வருகிற ஜனவரியில் நடத்துவது 

2.மதுரையில் நடைபெறும் மாநில மாநாட்டிற்கு திரளாக பங்கேற்பது 

3.ஓய்வூதியர்களுக்கு பண்டிகைக்கால முன்பணம் /LTC வசதிகள் அறிமுகப்படுத்தவேண்டும் 

4.ஓய்வூதியர்கள் /குடும்ப ஓய்வூதியர்களை CGHS திட்டத்தில் இணைப்பது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வது 

5.நிறுத்தி வைக்கப்பட்ட பஞ்சபடியை உடனே வழங்கிட வேண்டும் 

6..ஓய்வுபெற்ற தபால்காரர்கள் பிரச்சினைகளான 3050 அடிப்படை ஊதியத்தில் இன்னும் நிலுவைத்தொகை கிடைக்காதவர்களுக்காக மீண்டும் இயக்கங்களை நடத்துவது -அதேபோல் ஓய்வுபெற்ற GDS ஊழியர்களுக்கும் 01.01.2016 முதல் உயர்த்தப்பட்ட பணிக்கொடையினை விரைந்து வழங்கிட முயற்சிகள் எடுப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன .புதிய உறுப்பினர்களை சேர்ப்பதில் அதிககவனம் கொண்டு மேற்கொண்டு எங்களோடு ஒத்துழைக்க உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம் .

நன்றி .தோழமையுடன் KG.குருசாமி  கன்வீனர் NFPRP-நெல்லை 




1 comment:

  1. Heartily congratulations.
    Before retirement NFPE after retirement ☆NFPRP☆
    YOUR step for New organization is always welcome.
    One of your comrade,.
    K.PONNURAJ
    Retried P.A.
    TIRUNELVELI H.O.

    ReplyDelete