...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, June 29, 2021

 இன்று (30.06..2021) பணிநிறைவு பெறுகின்ற தூத்துக்குடி அஞ்சல் மூன்றின் கோட்டத்  தலைவர் தோழர் சங்கரநாராயணன் அவர்களின் பணிஓய்வு காலங்கள் சிறக்க வாழ்த்துக்கள்-- 30.06.2021

முத்துநகர் தந்திட்ட 

முத்தான தலைவனே !

சந்தன மனம் மாறமல் --NFPE எனும் 

சங்க நாதம் முழங்கியவனே !

தோழர் சங்கர நாராயணனே !

உன்னை வாழ்த்துகிறோம் .


ஆர்பாட்டத்தால் ஆவேசத்தால் 

சாதிக்கமுடியாத காரியங்களை கூட -உன் 

சாதுரியத்தால் சாதித்து காட்டியவனே !

தொழிற்சங்கத்தில் கூட 

அகிம்சைக்கு அச்சாரம்  போட்டவனே !


போட்டிகளுக்கு நடுவிலே --நீ 

பொறுப்புகளுக்கு வந்தாலும் கூட 

போட்டியை தவிர்க்க  --பொறுப்புதனை 

விட்டுக்கொடுத்து புகழின் 

உச்சிக்கு சென்றவனே !


தொழிற்சங்கத்தில் அரசியலா --

அரசியலில் தொழிற்சங்கமா ?என 

அனல் பறந்த நாட்களிலில் கூட 

அணி சாயம் அவ்வளவாய் -ஒட்டிக்கொள்ளாமல் 

அண்ணன் பாலுவோடும் --அண்ணன் KVS அவர்களோடும் 

இன்றுவரை அணி வகுத்தவனே !


அடுத்ததடுத்து மற்ற தோழர்களை 

கோட்ட செயலராய் பணியாற்றிட 

வாய்ப்புகளை உருவாக்கி தந்தவனே !

கோட்ட செயலராய் -கோட்ட தலைவராய் 

எந்த பொறுப்பில் இருந்தாலும் 

NFPE தூத்துக்குடி வலைத்தளத்தில் 

உன் வாசனைகள் இல்லாத 

வாசகங்கள் ஏது ?

இனிமேல் உன்போன்ற அமைதி மிகு 

ஆளுமைகள் ஏது ?ஏது ?

வாழ்க !நீ பல்லாண்டு !

என வாழ்த்தி மகிழும் --

உந்தன் தம்பி SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 















0 comments:

Post a Comment