...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, August 3, 2021

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !

                        தபால் காரர்கள் Postman mobile Application (PMA) செயல்படுத்துவது தொடர்பாக நிர்வாகம் தெரிவித்துள்ள புதிய வழிகாட்டுதலைகளை குறித்து நமது தபால்காரர் தோழர் /தோழியர்களுக்கு எழுகின்ற சந்தேகங்களையும் நடைமுறையில் சாத்தியமில்லாத வழிகளை குறித்தும் நாம் விவாதிக்கவேண்டியது காலத்தின் அவசியம் .

1.முதலில் PMA பயன்பாடு என்பது ஒரு அலுவலகத்தில் எத்தனை தபால்காரர்கள் பணியிடங்கள் இருக்கிறதோ அனைவருக்கும் தனியாக மொபைல் வழங்கவேண்டும் .ஆனால் நமது கோட்டத்தில் அனைவருக்கும் மொபைல் வழங்கப்படவில்லை .

2.பட்டுவாடா செய்கின்ற இடத்திலிருந்தே REMARK பதிவிடவேண்டும் என்பதெல்லாம் நெருக்கடியான நகர பகுதிகளில் குறிப்பாக போக்குவரத்து அதிகமாகவுள்ள இடங்களில் தபால்காரர்கள் எப்படி REMARK உள்ளிட்டவைகளை பதிவிடமுடியும் 

3.அதேபோல் BULK பட்டுவாடா செய்யப்படுகின்ற இடங்களிலிருந்தே APP பயன்படுத்திட நடைமுறை சாத்தியங்கள் இல்லை 

4.நேற்று நடைபெற்ற காணொளி காட்சிமூலம் கொடுக்கப்பட்ட அறிவுறுத்தல்களில் நமது தபால்காரர்களின் சந்தேகங்களுக்கு கோட்ட அலுவலகத்தில் கேட்டு பதில்சொல்வதாக DSM அவர்களும் தெரிவித்துள்ளார்கள் .

                   ஆகவே நமது தோழர்கள் இந்த புதிய அறிவிப்பின் படி உங்களுக்கு ஏற்படுகின்ற நடைமுறை சிக்கல்களை கோட்ட சங்கத்திற்கு அவசியம் தெரிவிக்கும் படி கேட்டுக்கொள்கிறோம் .வருகிற 06.08.2021 குள் நமது கோட்ட அலுவலகத்திற்கு இந்த மாத மாதாந்திர பேட்டியில் சேர்க்கவேண்டிய பிரச்சினைகளை கொடுக்கவேண்டியதிருப்பதால் தபால்காரர் தோழர்கள் விரைந்து செயல்படுமாறு கேட்டுக்கொள்கிறோம் 

தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை 





0 comments:

Post a Comment