...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, October 12, 2017

தேசிய அஞ்சல் வாரத்தை முன்னிட்டு நெல்லையில் நடந்த விழாக்கள் 
திருநெல்வேலி தலைமை அஞ்சலகத்தில் நடைபெற்ற விழாவில் நமது தென்மண்டல PLI ADM திரு பாண்டியராஜன் -நெல்லை கோட்ட பொறுப்பு SSP திரு A .சொர்ணம் திருநெல்வேலி உபகோட்ட ASP திரு செந்தில்குமார் நெல்லை கோட்ட P 3செயலர் ஜேக்கப் ராஜ்  
P 4 கோட்ட செயலர் SK பாட்சா உள்ளிட்ட நமது இயக்க தோழர்களும் -பயனாளிகள் என சுமார் 250 பேர் கலந்துகொண்டு சிறப்பித்தனர் .இந்தவிழாவில் தொழிலதிபர் திரு சொக்கலிங்கத்தேவர் அவர்கள் 100 SSA கணக்குகளை தொடங்கவும் -நமது திருநெல்வேலி தலைமை அஞ்சலக தோழர்கள் 50 SSA கணக்குகளை தொடங்கவும் நன்கொடைகளை வழங்கினார்கள் .திரு சொக்கலிங்கத்தேவர் அவர்களை அனுகி இந்த இமாலய சாதனைகளை புரிந்த நமது அமைப்பு செயலர் தோழர் S .முத்துமாலை அவர்களுக்கும் நெல்லை NFPE இன் வாழ்த்துக்கள் .
ஒருவருக்கு ஒருவேளை சாப்பாட்டுக்கு உதவினால் நாள்முழுவதும் நம்மை நினைப்பான் -பாடப்புத்தகங்களை வாங்கிக்கொடுத்தால் வருடம் முழுவதும் நினைப்பான் -ஆனால் ஆயுள் முழுவதும் நான்செய்த உதவியை நன்றியோடு இந்த SSA பயனாளிகள் நினைப்பார்கள் -இந்தவாய்ப்பை எனக்கு தந்த அஞ்சல்துறைக்கு என் நன்றிகள் என பெருமிதத்தோடு பேசினார் கொடைவள்ளல் சொக்கலிங்கத்தேவர் .


2 comments: