...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, October 19, 2017

                                         முக்கிய செய்திகள் 
PLI யில் சேருவதற்கான  வாடிக்கையாளர்கள் விரிவாக்கம் -------
            அஞ்சல் துறையின் அமுதசுரபி என வருணிக்கப்படும் PLI திட்டத்தில் சேருவதற்கான தகுதியை அஞ்சல் துறை விரிவுபடுத்தியிருக்கிறது .இதன்படி தனியார்பள்ளி ஆசிரியர்கள் -தனியார்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் -தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் -பொறியாளர்கள் -வழக்கறிஞ ர்கள் -PLI யில் சேரலாம் -என்று 18.10.2017 அன்று வெளியிடப்பட்ட அஞ்சல் வாரிய உத்தரவு தெரிவிக்கிறது 
---------------------------------------------------------------------------------------------------------------------------                 நெல்லையில் ஆர்ப்பாட்டம் -23.10.2017 
   அஞ்சலக சேமிப்புகளை வங்கிகளுக்கு தாரைவார்க்கும் நிதிஅமைச்சக உத்தரவை ரத்துசெய்ய கோரி நெல்லையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 

 மத்திய நிதியமைச்சக சமிபத் தியஉத்தரவு படி அஞ்சலக சேமிப்பு கணக்குகளின் சேவையை தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் வெளிநாட்டு தனியார் வங்கிகளான ICICI -AXIS மற்றும் HDFCஆகிய வங்கிகளுக்கு  அனுமதித்திருப்பதை ஏற்பது நமக்கு நாமே அழிவை ஆராத்தி எடுத்து வரவேற்பதற்கு சமமாகும் .இதன்மூலம் பெரும்பான்மையான அஞ்சலகங்களின் வருவாய் குறைவதோடு GDS ஊழியர்களின் ஊதியங்களிலும் பாதிப்புகள் வரும் .மேலும் அஞ்சல் துறையை நம்பியிருக்கின்ற பல்லாயிரக்கணக்கான MPKBY முகவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் .
இந்த கொடுமைகளை எதிர்த்து நெல்லை NFPE சங்கமும் தமிழ்நாடு அஞ்சல் முகவர்கள் சங்கமும் இனைந்து 23.10.2017 திங்கள் அன்று பாளையம்கோட்டையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்த முடிவுஎடுத்திருக்கிறோம் .ஆர்ப்பாட்டத்தில் அஞ்சல் ஊழியர்கள் மட்டுமல்ல அஞ்சலக முகவர்கள் அனைவரையும் கலந்துகொள்ள நமது முன்னணி தோழர்கள் விரைந்து பணியாற்றிட கேட்டுக்கொள்கிறோம் .
               20.10.2017  வெள்ளிக்கிழமை பொதுக்குழு வாரீர்! வாரீர் !
 நெல்லையில் 20.10.2017 அன்று நடைபெறும் தோழர் பாலு அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி கூட்டம் அதனை தொடர்ந்து நடைபெறும் புதிய பென்ஷன் குறித்த கூட்டத்தில் அனைத்து இளைய தோழர்களும் குறிப்பாக தோழியர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம் .குறிப்பாக மகிளா கமிட்டி நிர்வாகிகள் தோழியர்களை பெருமளவில் கலந்துகொள்ள உதவிடுமாறு கேட்டு கொள்கிறோம் .
நெல்லையில் மட்டும் புதிய பென்ஷன் திட்டத்தில் உள்ளவர்கள் 106 பேர் .இது நமது கோட்டத்தில் உள்ள நிரந்தர ஊழியர்களில் 30 விழுக்காடு என்பது குறிப்பிடத்தக்கது .இதற்கான அமைப்பாளர்கள் தோழர் G.சிவகுமார் உள்ளிட்ட தோழர்கள் தங்கள் பகுதி தோழர்களை மட்டுமல்ல கோட்டம் முழுவதிலும் உள்ள தோழர்களை தொடர்பு கொள்ள கேட்டு கொள்கிறோம் .
வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ்  கோட்டசெயலர் P3         
                            SK பாட்சா  கோட்டசெயலர் P4

4 comments:

  1. இதற்கு மேல்gds பாதிப்படையமாட்டார்கள்

    ReplyDelete