...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, May 22, 2019

                                                    முக்கிய செய்திகள் 
       
தமிழகத்தில் GDS ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை கோரியவுடனே ஏற்கனவே இடமாறுதலுக்கு விண்ணப்பித்திருக்கும் GDS ஊழியர்க்ளுக்கு இடமாறுதல் கொடுத்துவிட்டு மீதி உள்ள இடங்களுக்கு புதிய ஆட்களை நியமிக்கலாம் என்ற நமது கோரிக்கைகளை நிர்வாகம் புறக்கணித்தநிலையில் நியாயம் கேட்டு திண்டுக்கல் GDS சார்பாக  நீதிமன்றம் சென்ற ஊழியர்களுக்கு நிவாரணமாக இந்த வழக்கைசென்னை CAT (VACATION COURT ) ஏற்று  ADG அவர்களின் 15.04.2019 தேதியிட்ட அறிவிப்பிற்கு பதில் அளிக்கவேண்டியும் மீண்டும் இந்த வழக்கு 10.06.2019 அன்று நடைபெறும் என்றும் 15.05.2019 அன்று இருதரப்பிற்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது .ஏற்கனவே இடமாறுதல் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு தகுதிகளின் அடிப்படையில் மாறுதல் வழங்கிய பின்பே ஆன்லைன் நியமனம் மேற்கொள்ளவேண்டும் என்பதே இந்த வழக்கின் சாராம்சம் .
                                                  --------------------------------------------------------------
நீதி கேட்டு வீதியில் போராடியகாலம் என்பது மெல்ல மெல்ல மறைந்து போய் இன்று கோரிக்கைகளை வெல்ல நீதிமன்ற கதவுகளை தட்டவேண்டிய நிலைக்கு எல்லா துறையிலும் ஊழியர்கள் தள்ளப்பட்டுள்ளது சர்வ சாதாரணமாகி விட்டது .
 உதாரணமாக MACP பதவிஉயர்வினை 01.01.2006 முதல் வழங்கிடவேண்டும் என்ற உத்தரவை உச்ச நீதிமன்றம் அளித்தாலும் அது DEFENCE ஊழியர்களுக்கு மட்டும் தான் சிவில் ஊழியர்களுக்கு பொருந்தாது என்ற பாரபட்சத்தை நீக்கிட நாமும் நீதிமன்றம் சென்றால் என்ன என்ற எண்ணம் நமக்குள் எழுகிறது .இந்த வழக்கை தொடுத்திட நமது முன்னாள் கோட்டசெயலர் தோழர் R .ஹரிஹரகிருஷ்ணன்மேனேஜர் PSD திருநெல்வேலி  நமக்கு ஆலோசனைகள் வழங்கிவருகிறார்கள் .இது குறித்து நமது மாநிலச்சங்கத்திடம் விரைவில் பேசி மாநிலசங்கமே இந்த வழக்கை எடுத்து நடத்திட நாம் வலியுறுத்தவுள்ளோம் .எல்லா பிரச்சினைகளிலும் முன்கையெடுத்து செல்லும் நம் மாநிலம் இந்த பிரச்சினையிலும் முன்னின்று நடத்த வேண்டும் என்பது எங்கள் நம்பிக்கை .
 தோழமை வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ் --SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

0 comments:

Post a Comment