...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, October 20, 2021

 அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !   வணக்கம் .

இன்று 20.10.2021 புதன் மாலை 6    மணிக்கு   பாளை தலைமை அஞ்சலகத்தில் நடைபெறும் அஞ்சல் நான்கு -  அஞ்சல்  மூன்று கூட்டு பொதுக்குழுவில் தாங்கள் அனைவரும் கலந்துகொள்ளும்படி அன்போடு அழைக்கிறோம் ..

கூட்டு தலைமை --தோழர்கள் T .அழகுமுத்து கோட்டத்தலைவர் அஞ்சல் மூன்று A .சீனிவாசசொக்கலிங்கம் கோட்ட தலைவர் அஞ்சல் நான்கு

பொருள் --1.நமது முன்னாள் மாநிலசெயலர் அண்ணன் பாலு அவர்களின்                                 6வது நினைவஞ்சலி

                            2.அஞ்சல் நான்கின் நெல்லை கோட்ட மாநாடு நடத்துவது                                                         சம்பந்தமாக

                                3.மீண்டும் தலைதூக்கும் தபால்காரர்களுக்கு COMBINED                                                         DUTYபிரச்சினை 

                 அனைவரும் வருக !தங்கள் ஆலோசனைகளை தருக 

                            தோழமை வாழ்த்துக்களுடன் 

                SK .ஜேக்கப் ராஜ் --T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை 

முக்கிய அறிவிப்பு --வருகிற 24.10.2021ஞாயிறு அன்று மதுரை நாகமலை வெள்ளைசாமிநாடார் கல்லூரியில் வைத்து நடைபெறும் LGO    தேர்விற்கு செல்லும் ஊழியர்களுக்காக வேன் ஒழுங்கு செய்யமுடிவெடுக்கப்பட்டுள்ளது .வருகிறவர்கள் தங்கள் பெயர்களை கொடுத்தால் வேன் ஏற்பாடு செய்ய வசதியாக இருக்கும் .21பேர்செல்லும் வேன் வாடகை ரூபாய் 8000 17பேர் செல்லும் வேன் ரூபாய் 7000.வருகிறவர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தாற்போல் DIVIDE செய்து சிரமம் இல்லாமல் சென்றுவரலாம் .ஆகவே தேர்வுக்கு செல்லும் ஊழியர்கள் தங்கள் விருப்பங்களை எங்களுக்கு தெரிவிக்கவும் .தொடர்புக்கு 94421-23416

0 comments:

Post a Comment