...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, October 5, 2021

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !வணக்கம் .

ஒற்றுமைக்கு கிடைத்த மற்றுமொரு வெற்றி 

தபால்காரர் /மற்றும் MTS பதவிகளில் OFFICIATING பார்க்கின்ற GDS ஊழியர்களில் தேர்வுக்கு தகுதியுள்ள ஊழியர்களை தவிர மற்ற GDS ஊழியர்களை அவரவர் சொந்த இடத்திற்கு பணியாற்றிட அனுப்பிவிடுங்கள் என்கின்ற கோட்ட நிர்வாகத்தின் உத்தரவினை அடுத்த நிமிடமே அதை அமுல்ப்படுத்திட அனைத்து உபகோட்ட அதிகாரிகளும் புயல்வேகத்தில் செயல்பட்டு நேற்று மாலை அனைத்து GDS ஊழியர்களையும் RELIVE செய்திட உத்தரவுகள் பறந்துகொண்டிருந்ததன.இதுகுறித்து நமக்கு பல்வேறு அலுவலகங்களில் இருந்து வந்த வேண்டுகோள்களையை ஏற்று உடனடியாக நமது கோட்ட கூட்டு நடவடிக்கை குழு (NFPE P3,NFPE P4GDS மற்றும் AIGDSU )கோட்ட செயலர்களுடன் நமது SSP அவர்களை சந்தித்து ஒரு விரிவான கடிதத்தை கொடுத்துவிளக்கமாக  பேசினோம் .இந்த அதிரடி உத்தரவினால் நெல்லை கோட்டத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட GDS ஊழியர்கள் PSD உட்பட பாதிக்கப்படுவது  மட்டுமல்ல தபால்கார்கள் மற்றும் MTS ஊழியர்கள் மீது COMBINED DUTY திணிக்கப்பட்டால் நாங்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்கவேண்டிய அவசியம் ஏற்படும் என்றும் நிச்சயம் நாளை முதல் தபால் பட்டுவாடா பாதிக்கப்படும் அதற்கு நிர்வாகம் தான் பொறுப்பு என ஆணித்தரமாக விவாதித்தபின் SSP அவர்கள் கீழ்கண்ட முடிவுகளுக்கு சம்மதித்தார்கள் .அதன் படி

 1.தற்சமயம் இருக்கும் ARANGEMMENT தொடரலாம் .

2.இதில் தகுதியுள்ள GDSஊழியர்களிடம்  விருப்ப மனுக்கள் கோரப்பட்டு ARANGENET போடப்படும்என உறுதியளித்தார்கள்  .நாமும் அதை ஏற்றுக்கொண்டு எக்காரணம் கொண்டும் COMBINED  DUTYஎங்கள் மீது திணிக்கக்கூடாது யாருமே இல்லாத பட்சத்தில் OUTSIDER நாளொன்றுக்கு ரூபாய் 411வீதம் அமர்த்திட SPM/போஸ்ட்மாஸ்டர் களுக்கு அனுமதி அளித்திடவும் வலியுறுத்திவந்துள்ளோம் .

தோழர்களே !இருந்தாலும் சில உப கோட்ட அதிகாரிகள் SSP அவர்களின் உத்தரவை ஏற்று நல்ல முடிவினை எடுத்தார்கள் அவர்களுக்கு எங்கள் நன்றிகள் .ஒரு உப கோட்டத்தில் மட்டும் வழக்கம் போல் எழுத்துபூர்வமான உத்தரவு வந்தால் மட்டுமே தான் அனுமதிக்கமுடியும் என்று அடம்பிடிப்பதாக தெரிகிறது .ஆகவே அந்த உபகோட்டங்களில் இன்று நமது SPMதோழர்களுக்கு ARRANGENT குறித்து வழிகாட்டுதல்கள் தேவைப்பட்டால் கோட்ட சங்கங்களை அனுகவும் .

நேற்றைய நிருவாக முடிவுகளில் உடனடி மாற்றம் வந்தது என்றால் அது முழுக்க முழுக்க நமது NFPE பேரியக்கமும் நம்மோடு சேர்ந்து குரல் கொடுத்த AIGDSU சங்கத்திற்கு மட்டுமே இந்த பெருமை சேரும் என்பதை நமது தோழர்கள் புரிந்துகொள்ளவேண்டும் .ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதனை உணர்த்திடுவோம் .

 LSG குறித்த சில தகவல்கள் 

நமது கோட்டத்தில் சுமார் 60ஊழியர்களுக்கு மேல் LSG பதவி உயர்வு வந்துள்ளது .அதில் சிலருக்கு மேற்கு மண்டலம் ஒதுக்கப்பட்டுள்ளது .ஆனால் நமது கோட்டத்தில் VACANCY வெறும் 8 இடங்களே .இதில் நகர் பகுதியில் இருப்பதோ மேலப்பாளையம் மற்றும் கீழநத்தம் மட்டும் தான் .ஆகவே பழைய முறையில் கவுன்சிலிங் அடிப்படையில் ஊழியர்களின் விருப்பு மற்றும் மறுப்பு இவைகளை தெரிந்துகொண்டு ஊழியர்களுக்கு இடமாறுதல் கொடுத்திடவும் அதற்குமுன் பழைய விருப்ப இடமாறுதல்களையும் வழங்கிடவும் இன்று கோட்ட நிர்வாகத்திற்கு கடிதம் ஒன்று கொடுக்கவுள்ளோம் .

நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் அஞ்சல் மூன்று T.புஷ்பாகரன் கோட்ட செயலர் அஞ்சல் நான்கு I.ஞான பாலசிங் கோட்ட செயலர் AIGDSU 

0 comments:

Post a Comment