அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே ! வணக்கம் .
நேற்று நமது நெல்லை அஞ்சல் மூன்று மற்றும் அஞ்சல் நான்கு கோட்ட சங்கத்தின் கூட்டுபொதுக்குழு மிகச்சிறப்பாக நடைபெற்றது .மழை மிரட்டலுக்கும் பொருட்படுத்தாமல் சுமார் 50 தோழர்களுக்கு மேல் பங்கேற்றது மிக்க மகிழ்ச்சி நன்றி .கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்
1.அஞ்சல் மூன்றின் முன்னாள் மாநிலசெயலர் அஞ்சாநெஞ்சன் அண்ணன் பாலு அவர்க்ளின் 6வது ஆண்டு நினைவஞ்சலி கடைபிடிக்கப்பட்டது .
2.நெல்லை அஞ்சல் நான்கின் 39 வது மாநாடு வருகிற டிசம்பர் 5ம் தேதி ஞாயிறன்று பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் வைத்துநடத்துவது என்று அறிவிக்கப்படுகிறது .(முன்னதாக டிசம்பர் 12 என முடிவெடுத்தநிலையில் அஞ்சல் நான்கின் அகில இந்திய மாநாடு டிசம்பர் 12 மற்றும் 13 ம் தேதிகளில் கர்நாடகா மாநிலம் உடுப்பியில் நடைபெறுவதால் நமது மாநாடு 05.12.2021 க்கு மாற்றப்பட்டுள்ளது .மாநாட்டிற்கு நன்கொடையாக நமது அஞ்சல் நான்கு உறுப்பினர்களிடம் ரூபாய் 500 மட்டும் நன்கொடையாக பெறுவது என்று தீர்மானிக்கப்பட்டது .
3.தபால்காரர்களுக்கு combined duty உத்தரவை அமுல்படுத்தாத வண்ணம் GDS கிடைக்காத பட்சத்தில் OUT SIDER களை தடையின்றி அனுமதித்திட கோட்ட நிர்வாகத்தை வலியுறுத்துவது
4.GDS OFICIATING பார்க்கின்ற விஷயத்தில் மனிதாபிமான அடிப்படையில் நடந்துகொள்ளாமல் GDS ஊழியர்களை மிக கடுமையையாக நடத்தும் திருநெல்வேலி உபகோட்ட அதிகாரியின் அத்துமீறல்கள் குறித்து விவாதிக்கப்பட்டது .மேலும் இதுகுறித்து வருகிற மாதாந்திர பேட்டியில் பேசிடவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது .( ஆகவே உபகோட்டம் தாண்டி OFFICIATING பார்க்க கூடாது ,கணக்குகளை பிடித்துக்கொடுத்தால் தான் CONFORMATION போடுவேன் என மிரட்டும் போக்குகள் குறித்து மேலும் விவரங்களை தோழர்கள் உடனே கோட்ட சங்கத்திற்கு அனுப்பவும் )
5.நமது கோட்டத்திற்கு புதிதாக வந்த தோழர்களை பொதுக்குழுவில் அறிமுகப்படுத்தி அவர்களை பாராட்டி புகழாரம் சூட்டப்பது .அதன்படி தோழர் உதயகுமார் ,தோழர் மாரிமுத்து தோழர் ராமகிருஷ்ணன் தோழர் மகாராஜன் தோழர் மந்திரம் மற்றும் தோழர் மணிகண்டன் ஆகிய தோழர்களுக்கு இந்தபொதுக்குழுவில் வரவேற்புக்கொடுக்கப்பட்டது .
நன்றி .தோழமை வாழ்த்துக்களுடன்
SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை
0 comments:
Post a Comment