...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, October 14, 2021

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !சிந்தீப்பீர் !

மாநில அஞ்சல் நிர்வாகமே !

லாகின் டே (login day )என்ற பெயரில் பினகிலே (finacle )செயற்கை செயலிழப்பை செய்யும் கோட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடு !

நாடெங்கும் நவராத்திரி கொண்டாடும் வேளையில் அஞ்சல் ஊழியர்கள் மட்டும் அலுவலகத்தில் நித்தமும் சிவராத்திரியை கொண்டாடும் அவலத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர் .இவ்வளவு நாள் finacle பிரச்சனை என்றால் இன்போசியஸ் காரணம் சிபி காரணம் என சொல்லிவந்த காலங்கள் போக இன்று அளவுக்கதிகமான சர்வர் அளவீடை தாண்டி கணக்கில்லா கணக்குகளை ஒரே நாளில் தொடங்க சொல்லி வலியுறுத்தியத்தின் காரணமாக நேற்று செயற்கையான நெட்ஒர்க் பிரச்சனையை நமது ஊழியர்கள் சந்திக்கவேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது .

இதற்கு காரணமான அதிகாரிகள் அனைவரும் வழக்கமான தங்கள் அலுவலக நேரம் முடிந்தவுடன் அவரவர் இல்லம் தேடி இனிய பயணம் மேற்கொண்டிருந்தன்ர் .மாலை முதல் finalcle கிடைக்கவில்லை என்கின்ற நமது புலம்பல்கள் ஏனோ நிர்வாகத்தின் காதுகளுக்கு எட்டவில்லை .விளைவு பல அலுவலகங்களில் கணக்கை முடிக்க முடியாமல் ஊழியர்கள் திணறி கொண்டிருந்த்னர் .ஒருபக்கம் மேகம் இருட்டிக்கொண்டு இருளினை பாய்ச்சி கொண்டிருந்தது .மழைக்கு காரணமாக இடியும் மின்னலும் அவ்வப்போது எச்சரிக்கை கொண்டிருந்தது .இரவு 7.30மணிக்கு மேல் finacle செயல்படுவதாக வந்த செய்தி கேட்பதற்குள் மீண்டும் முடங்கிக்கொண்டது 

.இந்த செயற்கை செயலிழப்பிற்கு காரணம் பாங்கிங் day என்ற பெயரில் ஒரே நாளில் பலநூறு கணக்குகளை தொடங்க வற்புறுத்தியன் விளைவு என்றால் மிகையாகாது .நமது சர்வர் capacity எவ்வளவு ?அது எவ்வளவு டாடா வரை தாங்கும் என்கின்ற அடிப்படை  தகவல் கூட தெரியாதவர்களா இன்று கோட்ட /உப கோட்டங்களை ஆளுகிறார்கள் ! இரவு எட்டுமணிக்கு மேல் தான் finacle கிடைக்கிறது என்றால் அதுவரை இ ளவு காத்த கிளியாக ஊழியர்கள் குறிப்பாக தோழியர்கள் இருக்கவேண்டிய அவசியம் என்ன ?

லாகின் தினம் என்றால் எங்கள் ஊழியர்களை இரவுவரை அலுவலகத்திலே இருக்கவேண்டிய அவசியம் என்ன ?மூன்று வேளை சாப்பாட்டை ஒரே நேரத்தில் திணிக்கமுடியுமா ? நேற்று இரவெல்லாம் காத்திருந்த கோட்ட அலுவலக ஊழியர்கள் /DSM மற்றும் SPM ஊழியர்களுக்கு நிர்வாகம் கொடுக்கக்கூடிய நிவாரணம் என்ன ? 

இந்த கொடுமைகள் இனிமேலும் தொடர அனுமதியோம்  இ னிமேலும் வேலைநேரத்திற்கு அப்பால் நெட்ஒர்க் பிரச்சினை என்று ஊழியர்கள் குறிப்பாக பெண் ஊழியர்களை இரவு நேரம்வரை காத்திருக்க பணிக்கப்பட்டால் இந்த பிரச்சினையை நமது பகுதி மக்கள் பிரதிநிதிகள் மூலம் உரிய இடத்தில்  எழுப்பிடவும் மனித உரிமை அமைப்புகள் மற்றும் தொழிலாளர் நல அமைப்புகளிடம் நமது புகார் மனுக்கள் அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்படும் 


0 comments:

Post a Comment