...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Monday, January 9, 2017

அன்பார்ந்த தோழர்களே !
           தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு விடுப்பு வழங்குவதில் நிர்வாகத்தின் இத்தனை இழுத்தடிப்பு தேவையில்லாத ஒன்று .
            தமிழகத்தில் மத்தியஅரசு ஊழியர்களுக்கு பொங்கல் கொண்டாட விடுமுறை இல்லை --பொங்கல் கொண்டாடுவோர் விடுப்பு எடுத்து கொள்ளலாம் --பொங்கல் பண்டிகை நிரந்தர விடுமுறை பட்டியலில் இருந்து நீக்கம் என ஊடகங்கள் செய்திகளை கொப்பளித்து கொண்டு இருக்கின்றன .
ஏற்கனவே இது குறித்து மாநில நிர்வாகம் விடுமுறையை மாற்ற இயக்குனரகத்திற்க்கு கோப்புகள் சென்றுள்ளதாக தகவல்கள் வந்தாலும் ஆதார பூர்வமான தகவல்கள் வந்ததாக தெரியவில்லை .இந்நிலையில் தமிழக JCA மீண்டும் இந்த கோரிக்கைகைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்களை நடத்த அழைப்பு விடுத்துள்ளன .அதன் அடிப்பைடையில் நெல்லையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் பங்கேற்க அழைக்கின்றோம் .
                                     ஆர்ப்பாட்டம் 
நாள் 11.01.2017     புதன் மாலை 6 மணி 
இடம் --நெல்லை கோட்ட அலுவலகம் முன்பு 
கோரிக்கைகள் --மத்திய அரசே !அஞ்சல் துறையே ! 
 பொங்கல் பண்டிகைக்கு விடுமுறை வழங்கு !
இன உணர்வை தூண் டாதே !

                                வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ்            SK .பாட்சா                                         S.காலப்பெருமாள் 

0 comments:

Post a Comment