...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, July 11, 2017

                   டிராவை நோக்கி செல்கிறதா 13.07.2017 வேலைநிறுத்தம் ?
ஒருங்கிணைப்புக்குழு அறிவிக்கும் வரை பொறுமை காத்திடுக !
RMS பிரச்சினைகளுக்காக ஆர்ப்பாட்டம் நடத்திய அனைவருக்கும் நன்றி !

இன்று (11.7.17) காலை 12.30 மணியளவில் தொழிலாளர் நல ஆணையர் அழைப்பின் பேரில் NFPE COC சார்பில் மாநிலச் செயலர்கள்/ நிர்வாகிகள், ஆணையரை சந்தித்து 13.7.17 வேலை நிறுத்த கோரிக்கைகள் குறித்தும், தேவை குறித்தும் விளக்கி உரிய ஆவணங்களை அளித்துப் பேசினோம்.
ஆனால் நிர்வாகத் தரப்பில் எவரும் வரவில்லை. ஆணையர் இது குறித்து விசாரிக்கையில் மாநில நிர்வாகத்திற்கு சரியான தகவல் சென்று சேரவில்லை என்று உறுதி செய்யப்பட்டதால் நாளை காலை மாநில நிர்வாகத்தை ஆஜராகச் சொல்லி உடனடியாக கடிதம் மற்றும் email அனுப்பப் பட்டு அதன் நகலும் நமக்கு வழங்கப்பட்டது.
RMS CB Division வேலை நிறுத்தம்
"""""'""''""'''''''"""'''''"''''''''"""""""""""""""""""""""""'"''""""""""""""""
இன்று பிற்பகல் 3.00. மணியளவில் TN NFPE COC சார்பில் மாநிலச் செயலர்கள் அடங்கிய குழு CPMG,TN அவர்களைச் சந்தித்து RMS வேலை நிறுத்தம் குறித்துப் பேசியது. RMS CB Division வேலை நிறுத்தம், R3 சங்க முன்னாள் மாநிலத் தலைவர் தோழர். K.R.G. மற்றும் இரண்டு ஊழியர்களுக்கு பழிவாங்கும் விதமாக இடப்பட்ட 'Removed from Service', 'Compulsory retirement' உத்திரவுகள், மேற்கு மண்டல முன்னாள் R3 செயலர் கட்டாய இடமாற்றப் பிரச்னைகள் குறித்து விவாதித்து ஊழியர் சங்கங்களின் கடுமையான அதிருப்தியை CPMG அவர்களிடம் தெரிவித்தோம்.
இன்று பிற்பகல் 3.00. மணியளவில் TN NFPE COC சார்பில் மாநிலச் செயலர்கள் அடங்கிய குழு CPMG,TN அவர்களைச் சந்தித்து RMS வேலை நிறுத்தம் குறித்துப் பேசியது. RMS CB Division வேலை நிறுத்தம், R3 சங்க முன்னாள் மாநிலத் தலைவர் தோழர். K.R.G. மற்றும் இரண்டு ஊழியர்களுக்கு பழிவாங்கும் விதமாக இடப்பட்ட 'Removed from Service', 'Compulsory retirement' உத்திரவுகள், மேற்கு மண்டல முன்னாள் R3 செயலர் கட்டாய இடமாற்றப் பிரச்னைகள் குறித்து விவாதித்து ஊழியர் சங்கங்களின் கடுமையான அதிருப்தியை CPMG அவர்களிடம் தெரிவித்தோம்.
CPMG அவர்கள் முழுமையாக ஊழியர்
தரப்பு விஷயங்களை பொறுமையுடன் கேட்டறிந்தார். இந்த பிரச்னையை முழுமையாக தான் உணர்வதாகவும் ,
இதில் நியாயமான உதவிகளை நிச்சயம் உடன் செய்வதாகவும் உறுதியளித்தார்.
மேலும் இதற்கு உரிய அதிகாரிகளான
மேற்கு மண்டல PMG மற்றும் DPS ஆகியோரை அணுகி பிரச்னைகளை
எடுத்து பேசுமாறும் அறிவுறுத்தினார்.
இதனடிப்படையில் சென்னையில் IPPB விஷயமாக பணியில் ஈடுபட்டிருந்த மேற்கு மண்டல PMG அவர்களை சந்திக்க வேண்டினோம். அவரும் உடன் இசைந்தார்.
மாலை 5.30 மணியளவில் இந்த சந்திப்பு
நடைபெற்றது.
அவரிடம் பிரச்னைகளை எடுத்துக் கூறினோம் . ஊழியர் கொதி நிலையில் தன்னெழுச்சியாக RMS CB Division ல் வேலை நிறுத்தம் நடைபெறுவதையும் இது தமிழகம் முழுவதும் பரவிடும் அபாயம் உள்ளதையும் எடுத்துரைத்தோம்.
அதற்கு, அவரும் DPS மற்றும் PMG இருவரும் மண்டலத் தலைமையிடத்தில் இல்லாத நேரத்தில் இப்படி வேலை நிறுத்தம் நடைபெற்றதை எண்ணி வருந்துவதாகக் கூறினார். இந்த பிரச்னையில் தான் உடன் தலையிடுவதாகவும், உரிய நியாயம்
நிச்சயம் வழங்கப்படும் எனவும் உறுதியளித்தார்.
Disciplinary பிரச்னையில் வாய் மொழி உத்திரவுகள் எதுவும் இடமுடியாது என்பதால் உடனே பாதிக்கப்பட்ட ஊழியர்களை மேல் முறையீடு செய்திட பணித்தார். அதே போல் தோழர். ரங்கராஜன் இடமாற்றப் பிரச்னை, SRM CB Dn மீதான புகார் மனு இரண்டிலும் உடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
PMG அவர்கள் மீது நம்பிக்கை வைத்து உடன் CB Dn. வேலை நிறுத்தத்தை விலக்கிக் கொண்டு பணிக்குத் திரும்பிடவும் வேண்டினார். இதனடிப்படையில் COC கூடிப் பேசி RMS வேலை நிறுத்தத்தை விலக்கிக் கொள்ள முடிவெடுத்து அறிவித்தது. RMS CB Dn ஊழியர்கள் மாலை பணிக்குத் திரும்பினர். நிச்சயம் வெகு விரைவில் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் பழி துடைக்கப்படும். பணிக்கு நிச்சயம் அவர்கள் விரைவிலேயே திரும்புவார்கள் என NFPE COC உறுதியளிக்கிறது.
13.7.17 வேலை நிறுத்தம்
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
13.7.2017 வேலை நிறுத்தம் சம்பந்தமான இருதரப்பு பேச்சு வார்த்தை நாளை காலை 11.00 மணிக்கு தொழிலாளர் நல ஆணையர் முன் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் நாளை மதியம் CPMG அவர்கள் ஊழியர் தரப்பை சந்தித்து பேச வாய்ப்பும் உள்ளது. எனவே அதன் முன்னேற்றங்கள் எதுவும் நாளை COC யால் அறிவிக்கப்படும்.
இந்த சூழலில், தல மட்டத்தில் வேலை நிறுத்த தயாரிப்பு வேலைகளை முடுக்கி விடுமாறு தல மட்ட நிர்வாகிகளை வேண்டுகிறோம்.
உங்களின் வேகமும் வீச்சுமே பேச்சுவார்த்தை எது வாயினும் அதில் நல்ல முன்னேற்றத்தை ஏறபடுத்திட முடியும் என்பதை உணர வேண்டுகிறோம். தானாக எந்தப் பிரச்னையும் தீர்ந்ததாக தொழிற் சங்க வரலாறு கிடையாது. எந்த அளவுக்கு போராட்ட எழுச்சி ஏற்படுகிறதோ அந்த அளவுக்கு கோரிக்கைகளில் வெற்றி
நிச்சயம் ஏற்படும்.
போராட்ட வாழ்த்துக்களுடன்,
தோழமையுடன்,
மாநிலச் செயலர்கள்,
NFPE இணைப்புக்குழு,
தமிழ் மாநிலம்.

0 comments:

Post a Comment