...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, April 25, 2018

தொழிற்சங்க இலக்கணம் -நூற்றாண்டை கடந்தும் வாழும் வலம் வரும் கவிதை 

தொழிலாளர் இயக்கம்
பத்தாயிரம் முறை விழும்;
எழும்; வடுபடும்; மறுபடியும்; எழும்!
அதன் குரல்வளை இறுக்கப்படும்,
உணர்வற்றுப் போகும் வரை
தொண்டை அடைக்கப்படும்;

                  நீதிமன்றம் கேள்விக்கணை தொடுக்கும்;
                  குண்டர்களால் வசைபாடப்படும்;
                  பத்திரிக்கைகளால் வசைப்பாடப்படும்;
                  பொதுமக்களின் புருவ நெரிப்பும் கூட போர் தொடுக்கும்;
                  அரசியல்வாதிகளால் ஏய்க்கப்படும்;

ஓடுகாலிகளால் மறுப்புரைகள் கூறப்படும்;
கூதாடிகளால் பலிகொடுக்கப்படும்;
உளவாளிகளின் ஒற்றறியும் நோயால் பீடிக்கப்படும்;
கோழைகளால் நடுவீதியில் விடப்படும்;
துரோகிகளால் வஞ்சிக்கப்படும்;
தலைவர்களால் கூட விற்று விடப்படும்!

                  ஓ!
                  இவ்வளவு சோதனைகள் இருந்தாலும்
                  இந்த வையகம்,
                  இதுவரை கண்டிராத
                  உன்னத சக்தி வாய்ந்தது -
                  உழைக்கும் மக்களின் இயக்கம் ஒன்றுதான்!

ஆண்டாண்டு காலமாக அடிமைப்பட்டிருக்கும்
பாட்டாளிகளை விடுதலை செய்வதே
வரலாற்றுக் கடமையாகும்;
இதன் வெற்றி சர்வ நிச்சயமே!

                  - 1904ம் ஆண்டு “தி மெட்டல் ஒர்க்கர்” பத்திரிக்கையில்
                             ஈகிள்ஸ் ஸ்டெப்ஸ் என்னும் தொழிலாளியால் எழுதப்பட்டது.

0 comments:

Post a Comment