...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Monday, May 28, 2018

அன்பார்ந்த தோழர்களே !
CSI அமுலாக்கம் என்பது நமது கோட்டத்திற்கு 12.06.2018 என குறிப்பிட்டிருக்கீறார்கள் .அதற்கு முன்பே அடிப்படை வசதிகளை செய்துதரவேண்டும் என்று நாம் மாதாந்திர பேட்டியின் போது தெரிவித்திருந்தோம் .அதுமட்டுமல்லாமல் தகவல் அறியும்   உரிமை சட்டத்தின் கீழும் நமது கோட்ட சங்கம் சார்பாக தகவல்களை கேட்டிருந்தோம் .குறிப்பாக ஜெனெரேட்டர் -UPS CSI பயிற்சிகள் குறித்த கேள்விகளுக்கு கோட்ட நிர்வாகம் பதில் தர மறுத்தது .அதனை எதிர்த்து நாம் மேல் முறையிடு செய்ததின் விளைவாக நமது DPS அவர்கள் கோட்ட சங்கம் கேட்கும் அனைத்து விவரங்களையும் கொடுக்க உத்தரவிட்டுள்ளது .
அதன்படி1. நமது கோட்டத்தில் 302 ஊழியர்களுக்கு CSI பயிற்சிகள் கொடுக்கப்பட்டுள்ளது .இன்னும் 5 ஊழியர்களுக்கு மட்டுமே கொடுக்க வேண்டியுள்ளது .2.ஜெனெரேட்டரை பொறுத்தவரை 2.4 KV 5 KV 10 KV 15 KV என 104 ஜெனெரேட்டர்கள் (டிஸ்பென்சரி உள்பட ) இருப்பதாகவும் அனைத்தும் Working conditional யில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர் .3.UPS பொறுத்தவரை 95 அலுவலகங்களில் கிட்டத்தட்ட  C கிளாஸ் அலுவலகத்தில் உள்ள UPS பேட்டரிகள் அனைத்தும் சரியாக இயங்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
இதுகுறித்து கோட்ட நிர்வாகத்திடம் கேட்டபோது C கிளாஸ் அலுவலகத்தில் பேட்டரிகளை SSP வரம்பிற்குள் வாங்கப்படும் என்றும் அதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .இதர அலுவலகங்களுக்கு மண்டல அலுவலக ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .இதுபோக ஏனைய பிரிண்டர் சம்பந்தமான விஷயங்கள் நாளை SSP அவர்களுடன் விவாதிக்கயிருக்கிறோம் .
உங்கள் அலுவலக குறைகளை கோட்ட செயலருக்கு  நேரிடையாக தெரிவிக்க கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி .வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 


0 comments:

Post a Comment