...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, February 16, 2019

                                                 முக்கிய செய்திகள் 
1.NFPE சங்கத்தின் தொடர் முயற்சிக்கு கிடைத்த மற்றுமொரு வெற்றி 
பணமதிப்பிழப்பு சமயத்தில்   விடுமுறை  மற்றும் ஞாயிற்று  கிழமைகளில்  பணி செய்ததற்கான ஊக்க தொகை   ￰வழங்குவதற்கான உத்தரவு வந்துவிட்டது .
இதன் படி  ஒரு நாள் ஊதியம்  +DA  வழங்கிடவும் (  2 நாட்களுக்கு  ) ,
வேலை நாட்களில் கூடுதல் பணிக்கு  100 /  ஒரு நாளுக்கு  எனவும்  வழங்கிட வும் சிறப்பானதொரு  ஆணை .அதிகபட்சமாக ஒரு ஊழியருக்கு ரூபாய் 4000 என உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது 
சளைக்காமல் சலிக்காமல் மூன்று ஆண்டுகளாக விடா முயற்சிகளை ,ஏற்றுக்கொண்ட நமது மாநில சங்கத்திற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .
2.SB /RPLI /டார்கெட் நிறைவேற்றாவிட்டால் APAR யில் கைவைப்போம் என பூ ச்சண்டி காட்ட இனி முடியாது .இதோ PMG CCR அவர்கள் கோட்ட அதிகாரிகளுக்கு வழங்கிய வழிகாட்டுதல் குறிப்பு இதோ !
APAR மதிப்பெண்கள் வழங்கிட. சம்பந்தப்பட்ட  ஊழியரின்  பணி , அவர்களின்  அலுவலக  பிரிவு  , அவர்களால்  செய்ய இயலும்  வேலை இவற்றை  மட்டுமே  கணக்கீட்டில்  எடுத்து  கொள்ள  வேண்டும் . அதாவது முதன்மை  காரணிகள்  என்பவை  இவை  மட்டுமே . SB/ RPLI target achievement  ஆகியவற்றை கூடுதல் காரணிகளாக  மட்டுமே எடுத்து  கொள்ள வேண்டும்  . அதாவது  மதிப்பெண்கள்  வழங்கிட achievement on allotted target  மட்டுமே என கோட்ட அதிகாரிகள் கூறுவது  முறையல்ல  .
       நன்றி .தோழமை வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

0 comments:

Post a Comment