...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, March 14, 2019

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
நெல்லையில் நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க LSG ஊழியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு இனிதே நடைபெற்றது 
52 ஊழியர்களில் 26 தோழர்கள் பதவியுயர்வை ஏற்றுக்கொண்டார்கள் -25 தோழர்கள் பதவியுயர்வை ஏற்கவில்லை -ஒரு தோழருக்கு மட்டும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது 
 என கலந்தாய்வு கூட்டம் இனிதே முடிந்தது .தமிழக அஞ்சல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை நிகழ்த்தி காட்டிய நமது கண்காணிப்பாளர் அவர்களுக்கும் அவரது எண்ணங்களுக்கு செயல்வடிவம் தந்த ASP (OD ) அவர்களுக்கும் ஏனைய கோட்ட அலுவலக ஊழியர்களுக்கும் நமது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம் .
                                விடாது ..FSC .....விடாது NFPE .........
                     மீண்டும் திருநெல்வேலி HO FSC வழக்கு சூடு பிடிக்கிறது -திருநெல்வேலி போஸ்ட்மாஸ்டர் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட RULE 16 மண்டல அலுவலகத்தால் RULE 14 ஆக மாற்றப்பட்டுள்ளது .
       திருநெல்வேலி தலைமை அஞ்சலகத்தில் கடந்த ஜூலை 16 முதல் டிசம்பர் 16 வரைக்கான FSC உயர்த்தப்பட்ட நிலுவைத்தொகை ரூபாய் 3852 யை முறையாக செலவிடப்படவில்லை என்றும் அதற்கு காரணமான திருநெல்வேலி போஸ்ட்மாஸ்டர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று நாம் நடத்திய தொடர் ஆர்ப்பாட்டங்கள் /முயற்சிகள் காரணமாக திருநெல்வேலி போஸ்ட்மாஸ்டருக்கு 28.02.2018 அன்று கோட்ட அலுவலகத்தால் RULE 16 யின் கீழ்குற்றப்பத்திரிகை கொடுக்கப்பட்டது .அதனை பெற்று கொண்டு 30 நாட்கள் காலஅவகாசம் மற்றும் 21.03.2018 முதல் இரண்டு நாட்கள் ஆவணங்களை பார்வையிட அனுமதி  என எல்லா வாய்ப்புகளும் போஸ்ட்மாஸ்டருக்கு வழங்கப்பட்டு இறுதியாக 15.05.2018 அன்று 
திருநெல்வேலி போஸ்ட்மாஸ்டருக்கு ரூபாய் 3852 யை அவரது ஊதியத்தில் பிடித்தம் செய்ய அன்றைய கோட்ட அதிகாரி உத்தரவிட்டார்கள் .சம்பளத்தில் ரூபாய்3852 யும்  பிடித்தமும் செய்யப்பட்டது .
           தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து போஸ்ட்மாஸ்டர் அவர்கள் தனது தண்டனை RULE 16 யை குறைக்கவேண்டும் என முறையிட்டார் .வழக்கை பரிசீலித்த மண்டல நிர்வாகம் போஸ்ட்மாஸ்டரின் விருப்பத்தின் படியே 
2 புள்ளிகளை குறைத்து RULE 14 யாக வழக்கை 
மாற்றி (குறைத்து? )உத்தரவு பிறப்பித்துள்ளது .
            FSC வழக்கில் இருந்து தப்பிக்க போஸ்ட்மாஸ்டர் அவர்கள் எடுத்த நமது ஊழியர்க்ளுக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளையம் எதிர்த்து சமாளித்த திருநெல்வேலி தலைமை அஞ்சலக NFPE உறுப்பினர்கள் அனைவருக்கும் எங்கள் வீர வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் .
                                        தோற்றதில்லை -தோற்றதில்லை 
                                         NELLAI NFPE தோற்றதில்லை 
 தோழமை வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

0 comments:

Post a Comment