...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Monday, June 17, 2019

ஊதியம் /ஓய்வூதியம் கிடைப்பதில் தொடரும் தாமதத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் --
நாள் 18.06.2019 செவ்வாய் கிழமை
மாலை 6 மணி
இடம் பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகம் முன்பு
            நாளை(18.06.2019) நடைபெறும் ஆர்ப்பாட்டம் குறித்து விரிவான சுற்றறிக்கை உங்கள் அனைவருக்கும் கிடைத்திருக்கும் என நம்புகிறோம் .அஞ்சல் வாரியத்தின் இந்த மெத்தனப்போக்கை தடுத்திட நாடு முழுவதும் நமது சம்மேளனமும் -ஓய்வூதியர் சங்கமும் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்த அறைகூவல் விடுத்துள்ளன .
                             IT -MODERNIZATION INDIAPOST -2012
பல்வேறு தொடர்பு   சேனல்கள் மூலம் வாடிக்கையாளர்களை அனுகுவது .சிறந்த வாடிக்கையாளர்கள் சேவை .புதிய வழிகளின் மூலம் வணிக வளர்ச்சி மற்றும் வணிக செயல்முறைகளில் தகவல் தொழில் நுட்பம் என்ற நோக்கத்தோடு பல்வேறு நிறுவனங்களோடு நமது துறை கைகோர்க்க தொடங்கியது .இதன் அடிப்படையில் தான் CSI பணிகளை TCS நிறுனத்தோடு ஒப்பந்தம் செய்துகொண்டது .இதில் COUNTER-BACKOFFICE =ACCOUNTS-HR MANAGEMENT உள்ளிட்ட பணிகள் இதில் அடங்கும் .நோக்கம் நல்ல நோக்கம் தான் .ஆனால் அதை செயல்படுத்தியதில் உள்ள குறைபாடுகளை களைவதற்கு நிர்வாகம் எனோ தயக்கம் காட்டுகிறது .
                  இதே போல் தான் இன்போசிஸ் நிறுவனத்தோடு FINACLE ,MCCAMISH மற்றும் ATM பணிகளை செய்திட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது நெட்ஒர்க் சர்வீஸுக்கு SIFY நிறுவனம் RICT க்கு M/S TCIL என கைகோர்த்துள்ளது .ஒப்பந்தம் போடும்பொழுது இருந்த பணி நிலைமை அதை அமுல்படுத்தும் போது நிலவிய பணி அளவு அதை அமுல்படுத்திடும் போது நிச்சயம் பன்மடங்காக அதிகரித்திருக்கும் .இதனால் சேவை குறைபாடு ஏற்படுகிறது .பொதுமக்கள் நம்மீது கொண்டிருந்த நம்பிக்கை மெல்லமெல்ல குறைய தொடங்குகிறது .ஊழியர்களும் குறித்த நேரத்தில் பணிகளை முடிக்கமுடியாமல் ஒருவித மண உளைச்சலுக்கு ஆளாகிறார்கள் .
               ஆக நமது நோக்கம் வாடிக்கையாளர்களுக்கு தரமான சேவை தடைபடாமல் கிடைக்கவேண்டும் என்றால் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் 
ஊழியர்கள் இயல்பான சூழலில் பணியாற்ற நெட் ஒர்க் பிரச்சினை சீர்படவேண்டும் .இவைகளை கருத்தில்கொண்டு நிர்வாகமும் கொள்கை முடிவுகளை எடுக்கும் பொழுது தொழிற்சங்கங்களிடமும் கருத்துக்களை கேட்டறிய வேண்டும் .
சேவைகளை பெருக்க தேவையான ஒத்துழைப்பை நல்க என்றும் நாங்கள் துணைநிற்போம் .
                                கோரிக்கைகளில் தெளிவு 
                                   போராட்டத்தில் உறுதி 
                                பேச்சுவார்த்தையில் உண்மை இவைகள் தான் தொழிலாளி வர்க்கத்தின் வெற்றிக்கு அடையாளங்கள் .நன்றி 
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் --SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

0 comments:

Post a Comment