...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, June 7, 2019

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
     மாத ஊதியம் -ஓய்வூதியம் கிடைப்பதில் தொடர்ந்து ஏற்படும் காலதாமதத்தை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் 
National Federation of Postal Employees
All India Postal & RMS Pensioners Association

HOLD JOINT PROTEST DEMONSTRATIONS ALL OVER INDIA
NFPE – AIPRPA JOINT CALL
18.06.2019

 நாள் -18.06.2019  செவ்வாய் கிழமை 
நேரம் -மாலை 6 மணி 
இடம் -பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகம் முன்பு 

 CBS வந்தது மணிக்கணக்கில் பொதுமக்கள் காத்திருந்தார்கள் --CSI வந்தது அப்பொழுதும் பொதுமக்கள் காத்துக்கிடந்தார்கள் .சென்னை ஆடிட் அலுவலகம் மூலம் தான் சம்பளம் உள்ளிட்ட பணபயன்கள் என்றார்கள் நாள் கணக்கில் அஞ்சல் ஊழியர்களும் -ஓய்வூதியர்களும் காக்க வைக்கப்பட்டார்கள் .ஏதோ இனாம் கேட்டு காத்திருப்பதுபோல் ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியர்கள் ஏக்க பெருமூச் ச்சோடு காத்திருக்கும் சோகம் தொடர்ந்தது .
                      இலாகா ஊழியர்களுக்கும் ஊதியம் ஒருநாள் கழித்தும் GPF போன்றவைகள் பத்து முதல் பதினைந்து நாட்கள் கழித்தும் கிடைக்க பெற்றன .ஒவ்வொரு மாதமும் 20 ம் தேதியோடு அப்லோட் செய்யக்கூடாது என்ற ஆடிட் அலுவலக உத்தரவால் CEA மற்றும் TA பில்கள் கிடைப்பதில் ஏற்படும் காலதாமதம் -டெபுடேஷன்க்கு அனுப்பப்படும் ஊழியர்களுக்கு கிடைக்கவேண்டிய அட்வான்ஸ் டெபுடேஷன் முடிந்தபிறகும் கிடைப்பதில்லை .
                         மாத இறுதி நாளென்று சம்பளமும் -ஓய்வூதியமும் கிடைக்கவேண்டும் என்ற கட்டாயம் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது .இதற்கு காரணமான இன்போசிஸ் நிறுவனத்தோடு அஞ்சல் வாரியம் ஏன் இவ்வளவு இணக்கத்தோடு செயல்படவேண்டும் என்பது புதிராகவே உள்ளது .இப்படி ஒவ்வொரு மாதமும் சம்பளம் மற்றும் பென்ஷன் கிரெடிட் கொடுப்பதில் உள்ள காலதாமத்தை CPMG அவர்களின் கவனத்திற்கு கொண்டுசென்றால் அவர்கள் வழக்கமான பதிலாக இதுகுறித்து DIRECTORATE க்கு எழுதியுள்ளோம் என்கிறார்கள் .
                    அஞ்சல் நிர்வாகத்தின் இந்த  மெத்தன போக்கினை கண்டித்தும் இந்த விஷயத்தில் அஞ்சல் வாரியத்தின் உடனடி தலையீடு தேவை என கருதியும் நமது NFPE -ஓய்வூதியர்சங்கம் கூட்டாக இணைந்து வருகிற 18.06.2019 அன்று அகிலஇந்திய அளவில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்திட அறைகூவல் விடுத்துள்ளன .அதனை ஏற்று நமது நெல்லை கோட்டத்திலும் நடைபெறும் இணைந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனைவரும் வாரீர் ! என அழைக்கிறோம் .
                  உங்கள் கடிதங்கள் கருணைமனுக்கள் விண்ணப்பங்கள் ஒருநாளும் தீர்வினை தந்திடாது .ஒன்றுபட்டு போராடினால் மட்டுமே நாம் நமது கோரிக்கைகளை வென்றெடுக்க முடியும் என்ற நமது தலைவர் தோழர் பாபு தாரா பாதா அவர்களின் முழக்கத்திற்கேற்ப ஒன்றுபடுவோம் !
போராடுவோம் !வெற்றி  பெறுவோம் .
தோழமை வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 



0 comments:

Post a Comment