...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, June 11, 2019

                                                         சென்னை    C A T  மதுரைக்கு வரவேண்டும் -அதற்காக உங்கள் ஆதரவை தர வேண்டும் 
சென்னை  உயர்நீதிமன்றத்தின் மத்திய நிர்வாயக தீர்பாயகம்  மதுரை உயர்நீதிமன்ற கிளைக்கு CIRCUIT BENCH ஆக வரவேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் சில வரிகள் உங்களுக்காக ........
     பல ஆண்டுகளுக்கு முன்பு  உயர்நீதிமன்ற கிளை மதுரைக்கு கொண்டுவரவேண்டும் என்ற போது அதை எதிர்த்தவர்கள் உண்டு ஆதரித்தவர்கள்உண்டு .  இறுதியாக  2004 ம் ஆண்டு மதுரையில் உயர்நீதிமன்ற கிளை செயல்படத்தொடங்கியது .இதில் 13 மாவட்டங்கள் அதாவது கன்னியாகுமரி திருநெல்வேலி தூத்துக்குடி மதுரை திண்டுக்கல் ராமநாதபுரம் விருதுநகர் தேனி சிவகங்கை போக மத்திய தமிழகத்தில் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருச்சி கரூர் மாவட்டங்களை உள்ளடக்கி தனது அதிகார எல்லையை வரையறுத்துக்கொண்டது .அதன் அடிப்படையில் தான் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மத்திய நிர்வாயக தீர்பாயகம்  (CAT ) பெஞ்ச் வரவேண்டும் என்றகோரிக்கையும் எழுந்தது .அகிலஇந்திய அளவிலே 17 மத்திய நிர்வாயக தீர்பாயகம்  தனக்குள் 20 CIRCUIT பெஞ்ச் என தனது அதிகார எல்லையை பகிர்ந்தளிக்கும் போது ஏன் தென் மற்றும் மத்திய தமிழகத்தில் உள்ள 13 மாவட்டங்களுக்காக CAT மதுரைக்கு வருவதில் என்ன தடை இருக்கிறது என்று வழக்கறிஞர்களே நீதிமன்றம் சென்றனர் .ஆனால் துரதிஷ்ட்டமாக சென்னை உயர்நநீதிமன்றம் மதுரை கிளைக்கு CAT செயல்பட தடை விதித்தது. .தடை விதிக்கப்பட்டு கிட்டத்தட்ட 13 வருடங்களுக்கு மேலாகியுள்ள நிலையில் மீண்டும் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் CAT க்கு ஒரு CIRCUIT பெஞ்ச் தேவை என்ற எண்ணம் பரவலாக எல்லாரது மனதிலும் எழுந்துள்ளது இந்த தடையை நீக்கிட வேண்டும் என எண்ணங்கள் இருந்தாலும் அதை முன்னெடுத்து செல்ல தேவைப்படும் செலவுகள் கருதியோ என்னவோ இந்த வழக்கு கிடப்பிலே கிடக்கிறது .இது குறித்து ஓய்வூதியர் சங்க பொதுச்செயலர் தோழர் K.ராகவேந்திரன் அவர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தபோது இதே தடையை காரணம் காட்டி 22.08.2015 அன்று அரசு பதில் அளித்துள்ளது .இன்னும் எத்தனை ஆண்டுகள் என்றாலும் தடை இருந்துகொண்டே இருக்கும் .மீண்டும் ஏதாவது அமைப்பு அல்லது தொழிற்சங்கங்கள் இந்த வழக்கில் தங்களையும் வாதியாகஇணைத்து கொண்டு வழக்கை ஏற்றி நடத்தினால் மட்டுமே தீர்வு கிடைக்கும் .இதற்காக நமது மண்டலத்தில் உள்ள அமைப்புகள் இணைந்து செயல்படவேண்டிய சூழல் உருவாகவேண்டும்  .இன்றைய நிலையில் சென்னை CAT யில் நமது பகுதி ஊழியர்களின் வழக்கே சுமார் 500 யை  தாண்டும் .இது அஞ்சல் துறைக்கு  மட்டும் உள்ள எண்ணிக்கை .இதர துறைகளை சேர்த்து கணக்கிட்டால் ஆயிரத்தை தாண்டும் .
ஆகவே ஏற்கனவே நீதி துறைக்கு சம்பந்தமுள்ள முன்னனி தோழர்கள் குறிப்பாக முன்னாள் R3 மாநில தலைவர் தோழர் தியாகராஜன் முன்னாள் P3 மண்டல செயலர் அண்ணன் சின்ராஜ் போன்றவர்கள் நிலுவையில் உள்ள வழக்கில் நாமும் IN PLIED ஆக ஆலோசனைகளை  வழங்கிட கேட்டுக்கொள்கிறோம்  
   தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ்_ SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

0 comments:

Post a Comment