...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, June 18, 2019

ஒரு இளைய தோழரின் இனிய கவிதை --தோழர் தினேஷ் நிதிச்செயலர் மத்திய சென்னை 
: மாதம் மும்மாரியும் பொய்யவில்லை
மாதக்கடைசியில் சம்பளமும் 
வந்த பாடியில்லை!
அஞ்சல் துறைகயை நவீனமாக்குவோமென்ற
TCS, SIFY ஐயும் காணவில்லை!

பணிவிடை பெற்றாலும் 
தளராத நம்பிக்கை மனதிலே - அவர்களின்
தள்ளாத வயதும் ஒரு குறையில்லை!
வற்றிய வயிற்றின் வன்பசி தீருமா?
பென்சன் ஒழுங்காய் வந்து சேருமா?
முற்றிய ஏழ்மையும் முழுதும் ஒழியுமா?

விடுமுறை நாளில் வீதிவர முடியலை!
வேலை நாளிலோ வீடுவர முடியலை!
இனிவரும் நாட்கள் எப்படி இருக்குமோ?
எண்ணினால் என்றைக்கும் தூங்கவும் முடியலை!

போர்டலும்(Portal)மாடுயுலும்(module) முட்டி மோதுது- இடையில் மாட்டிய
எங்க வேலை நேரம் சாகுது!

எனவே, நாளை வீதிக்கு வந்து போராடு
உரிய நீதிக்காக நடைப்போடு.!
நன்றி .தோழர் சுந்தர மூர்த்தி மத்திய சென்னை 

0 comments:

Post a Comment