...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, February 26, 2020

 அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !
வணக்கம் .டெபுடேஷன் குறித்து 24.02.2020 அன்று கோட்ட நிர்வாகத்தால் அனுப்பப்பட்ட உத்தரவு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது .நேற்று கன்னியாகுமரியில் இருந்த நமது கோட்டத்தின்  கூடுதல் பொறுப்பு வகிக்கும் நமது கண்காணிப்பாளர் திரு .VPC  அவர்களிடம் நாகர்கோயிலுக்கு சென்று  பேசியதன் விளைவாக நேற்றே 24.02.2020  தேதியிட்ட  டெபுடேஷன் உத்தரவை ரத்து செய்திட உத்தரவிட்டார்கள் .ஊழியர்களின் உணர்வுகளை புரிந்துகொண்ட செயல்படுத்திய நமது SSP மற்றும் ASP (HOS ) அவர்களுக்கு நமது நன்றியை தெரிவித்துக்கொள்கிரோம் .மேலும் நம்மோடு நேற்று நமது கோரிக்கைகளுக்காக  உடன்நின்ற அஞ்சல் நான்கின் கோட்ட செயலர் மாநில உதவி தலைவர் SK .பாட்சா அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .
* நமது கோட்டத்தில் தபால்கார்களுக்கான VACANCY அறிவிக்கப்பட்டுள்ளது (மாறுதலுக்கு உட்பட்டது )
MTS TO POSTMAN  UR -1 SC -1 
GDS  TO POSTMAN  UR -1 SC -1  OBC-2 EWS-1 
                                  போராட்டங்கள் வெல்லட்டும் 
இன்று கோவில்பட்டியில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு நெல்லை கோட்ட சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களையும் ஆதரவையும் தெரிவித்துக்கொள்கிறோம் 
இதோ கோவில்பட்டி கோட்டத்தின் பதிவு 
தோழர்களே ,        வணக்கம்                      நமது கோவில்பட்டி கோட்டத்தில் Target என்றபெயரில் ஊழியர்களை மிகவும் வேதனை படுமளவு நிர்வாகம் நடத்துகிறது உதாரணமாக IPPB mega log in day அன்று account பிடிக்கவில்லை என்பதற்காக, உங்கள் மேல் ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கூடாது என்று report கேட்கப்பட்டுள்ளது அதை எதிர்த்து நமது சங்கத்திலிருந்து கோட்ட நிர்வாகத்திற்கு கடிதம் கொடுத்துள்ளோம், மேலும் வருகிற வியாழக்கிழமை 27.2.20 அன்று கோவில்பட்டி கோட்ட அலுவலகம் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டமும் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.   
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 


0 comments:

Post a Comment